பெண்கள் உலகம்

கைகள், தோள்பட்டையை வலுவாக்கும் லோலாசனம்

Published On 2017-06-02 12:20 IST   |   Update On 2017-06-02 12:21:00 IST
இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் கைகள், மணிக்கட்டுகள், தோள்பட்டைகள் வலுப்பெறும். இந்த ஆசனத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
செய்முறை :

விரிப்பில் பத்மாசனத்தில் அமர்ந்து தொடைகளை ஒட்டியவாறு உள்ளங்கைகளை தரையில் பதிக்கவும். ஆழமாக மூச்சை இழுத்து கைகளின் பலத்தால் உடலை மேலே தூக்கவும். இந்நிலையில் மூச்சை நிறுத்தி ஒரு சில விநாடிகள் இருக்கவும். மூச்சை வெளிவிட்டு பத்மாசனத்திற்கு வரவும்.

இவ்வாறு 5 முதல் 7 முறை செய்யலாம்.

பலன்கள் :

கைகள், மணிக்கட்டுகள், தோள்பட்டைகள் வலுப்பெறும்.

வயிற்றுத் தசைகள் மேம்பாடு அடைகின்றன.

உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது.

கை,கால்களிருக்கும் வேண்டாத தசைகளைக் குறைக்கிறது.

Similar News