லைஃப்ஸ்டைல்

வயதானவர்களின் மூட்டுவலியை குறைக்கும் சந்தி முத்திரை

Published On 2016-10-08 05:08 GMT   |   Update On 2016-10-08 05:08 GMT
வயதானவர்கள் மருந்துகள் இல்லாமல், ஓய்வு நேரங்களில் சில முத்திரைகளைச் செய்து வந்தாலே, மூட்டுவலி காணாமல் போய்விடும்.
 வயதானவர்களின் நிரந்தரப் பிரச்சனை, கை, கால்வலி, மூட்டுவலி மற்றும் உடல்வலி. வலி மாத்திரைகளால் பெரிய பலனும் கிடைப்பது இல்லை. மருந்துகள் இல்லாமல், ஓய்வு நேரங்களில் சில முத்திரைகளைச் செய்தாலே, மூட்டுவலி காணாமல் போய்விடும்.

 சந்தி முத்திரை செய்முறை :

வலது கை: மோதிர விரல், கட்டை விரலின் நுனிகள் தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.

இடது கை: நடுவிரல், கட்டை விரலின் நுனிகள் தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்கட்டும்.

காலை மாலை என இருவேளையும் 20 நிமிடங்கள் செய்யலாம்.

பலன்கள்: முழங்கால் மூட்டுவலி சரியாகும். முழங்கால் மூட்டு சவ்வுக் கிழிதல், மூட்டு பலமின்மை, மூட்டில் உள்ள திரவம் குறைதல், வீக்கம், வலி சரியாகும்.

Similar News