பெண்கள் உலகம்

மனஅமைதியை அளிக்கும் பரமபிதா ஆசனம்

Published On 2016-09-27 08:32 IST   |   Update On 2016-09-27 08:32:00 IST
தூக்கமின்மை போன்ற நோய்களுக்கு விரைவில் நிவாரணம் அளிக்கக் கூடியது பரமபிதா ஆசனமாகும்.
பிரார்த்தனைக்கு உறுதுணையாக அமைவதே பரமபிதா ஆசனமாகும். 

செய்முறை :

விரிப்பில் முழங்காலிட்டு அமர்ந்து கொள்ளவும். பின்னர் மெதுவாக எழுந்து இரு கைகளையும் இருபக்கங்களிலும் நீட்டி விரித்து தலையை பின்னார் சாய்த்து வானத்தைப் பார்க்கவும். இரு உள்ளங்கைகளும் வானத்தைப் பார்க்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும். 

இதனால் வானத்தில் உள்ள லட்சக்கணக்கான நட்சத்திரங்களின் கதிர்கள் நமது உள்ளங்கையை அடைந்து அங்கிருந்து நமது மூளைச் செல்களை விருத்தி அடையச் செய்யும். மிகக் குறுகிய நேரத்தில் மனஅமைதியை அளிக்க வல்லதே பரமபிதா ஆசனமாகும். 

வானத்தைப் பார்க்க முடியாதாவர்கள் தங்கள் அறையிலிருந்தும் இந்த ஆசனத்தைப் பயிலலாம். உயர் இரத்த அழுத்தம், தூக்கமின்மை போன்ற நோய்களுக்கு விரைவில் நிவாரணம் அளிக்கக் கூடியது பரமபிதா ஆசனமாகும். 

Similar News