பெண்கள் உலகம்

தியானம் செய்வதால் கிடைக்கும் பயன்கள்

Published On 2016-08-29 07:15 IST   |   Update On 2016-08-29 07:15:00 IST
தினமும் தியானம் செய்வதால் கிடைக்கும் பயன்கள் என்னவென்று கீழே பார்க்கலாம்.
1. தியானம் செய்வதால் உடலும், மனமும் சுறுசுறுப்பாக இருக்கும். சந்தோசத்துடனும், ஆரோக்கியத்துடனும், இருப்பதற்கு தியானம் உதவும் என்று பல்வேறு அறிவியல் ஆய்வுகளும் நிரூபித்துள்ளன.

2. தியானமானது ஓய்வில்லாது சலனத்துடன் இருக்கும் மனதை சாந்தப்படுத்துகின்றது. 10 நிமிடம் தியான நிலையில் உட்கார்ந்து சுவாசிக்கும்போது தூய்மையான காற்று உள்ளே செல்கிறது. அதனால் மார்பு விரிவடைந்து நம் கோபத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

3. தியானம் கற்கும் ஆற்றலையும், ஞாபக சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.

4. மூளையை சமச்சீராக செயல்பட வைத்து மனதுக்கு உற்சாகத்தையும், உடலுக்கு இளமையையும் தருகிறது.

5. தீய எண்ணங்களை விரட்டி,உள்ளுணர்வை மேம்படுத்துகிறது.

6. நமது உடலின் மொத்த செயல்பாட்டையும் அதிகரிக்கிறது.தேவையற்ற எதிர்மறையான எண்ணங்களை கட்டுப்படுத்துகிறது.

7. மது, சிகரெட் போன்ற தீய செயலுகளில் இருந்து விடுபட உதவுகிறது.

8. பொறுப்புணர்வை அதிகரிக்கச்செய்து கவலையை போக்குகிறது.

10. சகிப்புத்தன்மையை அதிகரித்து, சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது.

11. நம் கவனத்தை கூர்மைப்படுத்துகிறது.

12. தியானம் செய்வதால் படிப்பு,வேலை என்று எந்த நிலையிலும் நம் கவனம் சிதறாது.

13. நம்மை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்கிறது.

14. தியானம் செய்வதால் நம் மனம் அமைதியடைகிறது.

15. தசைகளுக்கு ஏற்படும் இறுக்கத்தை போக்குகிறது. அலர்ஜி மற்றும் ஆர்த்தரைடிஸ் நோய்கள் வராமல் தடுக்கிறது.

16. மனக்கவலையை போக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

17. ஆற்றல், சக்தி வீரியத்தை அதிகரிக்கச் செய்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

18. உடலில் உள்ள திசுக்களை பாதுகாத்து தோலுக்கு பலம் கூட்டுகிறது.

19. இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை அண்டவிடாமல், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கிறது.

20. ஹார்மோனை சரியான விகிதத்தில் சுரக்கச் செய்து உடலுக்கு மிகவும் நன்மை தருகிறது.

Similar News