பெண்கள் உலகம்

மனஅமைதி கிடைக்க செய்ய வேண்டிய ஆசனம்

Published On 2016-07-30 12:16 IST   |   Update On 2016-07-30 12:16:00 IST
மன அமைதி கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சித்தாசனம் செய்யலாம்.
இந்த ஆசனம் சித்தர்கள் அமருவது போன்று இருப்பதால் பெற்றது. இந்த ஆசனத்தை சாம ஆசனம் என்று அழைக்கலாம்.

செய்முறை :

விரிப்பில் பத்மாசனம் செய்வது போல் வலது காலை இடது தொடையிலும், இடது காலை வலது தொடையிலும் வைக்கவும்.

உள்ளங்கைகள் மேலே பார்த்தவாறு இடது கை மேல் வலது கையை வைக்க வேண்டும். அதே சமயத்தில் இடது கெண்டை கால் மேல் வலது கெண்டைக் கால் இருக்க வேண்டும்.

தொடை,முழங்கால் தரையிளிருக்க நிமிர்ந்த நிலையில் உட்கார வேண்டும். முழங்கால் தரையில் பதிய நேராக அமரவும்.

கைகள் இரண்டும் முழங்காலுக்கு மேலே உள்ளங்கை வெளியே தெரியும் படி வைக்க வேண்டும். இந்நிலையில் கண்களை மூடி தியானம் செய்து மனதை ஒருநிலைப்படுத்தவும்.

பிறகு ஆரம்ப நிலைக்கு வரவும்.

பலன்கள் :

மனம் அமைதி அடைகிறது.

முகம் பொலிவு அடைகிறது.

பாலுணர்வு சமன்பாடு அடைகிறது.

Similar News