பெண்கள் உலகம்

அஜீரணம், இரத்த அழுத்தத்தை குணப்படுத்தும் வீராசனா

Published On 2016-07-06 09:43 IST   |   Update On 2016-07-06 09:43:00 IST
அஜீரணம் ஏற்படாமல் இருக்கவும், பசியை தூண்டவும் யோகாவில் நிறைய ஆசனங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் வீராசனா. இந்த ஆசனத்தை செய்வது என்று பார்க்கலாம்.
அஜீரணம் என்பது உண்ணப்படும் உணவு முழுவதும் செரிக்காமல் வயிற்றிலேயே இருக்கும். இதனால் நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம், பசியின்மை, வயிற்று வலி உண்டாகும். அஜீரணத்தால், வாந்தி, வயிற்றுப் போக்கும் கூட ஏற்படும்.

அஜீரணம் ஏற்படாமல் இருக்கவும், பசியை தூண்டவும் யோகாவில் நிறைய ஆசனங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் வீராசனா. இந்த ஆசனத்தை செய்வது என்று பார்க்கலாம்.

செய்முறை :

முதலில் ஒரு விரிப்பில் முட்டிபோட்டு அமருங்கள். இரண்டு கால்களும் ஒட்டியபடி முட்டி போட்டு இருக்க வேண்டும். பாதத்தின் மீது அமருங்கள். மேல் பாதம் முழுவதும் தரையோடு ஒட்டியிருக்க வேண்டும். உள்பாதத்தின் மீது நீங்கள் அமர்ந்திருக்க வேண்டும். உடலை நேராக வைத்திருங்கள்.

முதுகு நிமிர்ந்து இருக்க வேண்டும். வயிறு உள்ளிழுத்தபடி மூச்சை ஆழ்ந்து இழுத்து விட வேண்டும். இந்த நிலையில் 30 நொடிகள் இருங்கள். இந்த ஆசனத்தை காலை மாலை என இரு வேளைகளிலும் செய்யலாம். இதனை செய்யும்போது, வயிறு காலியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

பலன்கள் :

ஜீரணத்தை அதிகப்படுத்தும், ஆஸ்துமா, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். மூட்டு பாதிப்பு இருப்பவர்கள், இதய பாதிப்பு இருப்பவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

Similar News