பெண்கள் உலகம்
கொரோனா ஊரடங்கை பயனுள்ளதாக்கும் குழந்தைகள்
கொரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியம் வரைந்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ஊரடங்கை குழந்தைகள் பயனுள்ளதாக கழிக்கின்றனர்.
உலகத்தையே உலுக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், இந்த வைரஸ் குழந்தைகளை பாதிக்காமல் இருப்பதற்காகத்தான் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. ஆனால் வீட்டுக்குள்ளே இருக்கும் சிறுவர், சிறுமிகள் எத்தனை பேர்? ஊரடங்கை பயனுள்ளதாக கழிக்கிறார்கள் என்ற வினா எழத்தானே செய்கிறது.
படுசுட்டித்தனமாக இருக்கும் குழந்தைகள் வீட்டுக்குள் அங்குமிங்கும் ஓடுவதோடு, பெற்றோரின் பேச்சை காதில் வாங்காமல் செய்யும் சேட்டைகளால், உங்க தொந்தரவு தாங்க முடியலப்பா என்று புலம்பும் பெரியவர்களின் மனக்குமுறலை தான் பெரும்பாலான வீடுகளில் தற்போது கேட்க முடிகிறது.
இந்த குழந்தைகளுக்கு மத்தியில், சில குழந்தைகள் கொரோனா குறித்த தகவலை சேகரிப்பதோடு, அது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள். அதேபோன்று, குமரி மாவட்டம் விரிகோடு கையாண்டவிளை பகுதியில் வசிக்கும் அஸ்மிதா (11), இம்மானுவேல் (7) என்ற அக்காள், தம்பி இருவரும் கொரோனா வைரஸ் குறித்து ஓவியம் வரைவதோடு, வாசகங்களையும் எழுதுகிறார்கள். அதாவது,
* கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்கும் வழிமுறைகள்
* வயதானவர்கள் எதை செய்யக்கூடாது
* கொரோனாவை விரட்ட நாம் என்ன செய்ய வேண்டும்
* கொரோனா குறித்து அரசை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் என விலாவாரியாக வாசகங்களை எழுதியதோடு, அதற்கேற்ப ஓவியத்தையும் தீட்டியுள்ளனர்.
* கொரோனா விதிமுறையை மீறினால் என்னவாகும் என செய்தித்தாளில் வரும் தகவல், படங்களை ‘கட்‘ பண்ணியதோடு, அதனை தங்களுடைய கைவண்ணத்தால் விழிப்புணர்வு வாசகங்களையும் எழுதி, மேலும் உயிரூட்டும் வகையில் ஒட்டி வைத்துள்ளனர்.
இந்த ஆர்வத்தை உணர்ந்த அவர்களுடைய பெற்றோர் ராஜ்குமார், சுமங்கலி ஆகிய இருவரும் தங்களுடைய குழந்தைகளை தட்டிக் கொடுத்து ஊக்குவித்தனர். அதே சமயத்தில், குழந்தைகளின் கொரோனா விழிப்புணர்வு ஓவியம், வாசகங்களை முகநூல், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களிலும் பரப்பினர். இதனை பார்த்த நண்பர்கள், உறவினர்கள் குழந்தைகளின் விழிப்புணர்வு நடவடிக்கையை பாராட்டினர். விழிப்புணர்வு ஏற்படுத்தும் அஸ்மிதா 6-ம் வகுப்பும், இம்மானுவேல் 2-ம் வகுப்பும் படிக்கிறார்கள். இதுகுறித்து இருவரும் கூறுகையில், கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம், வீட்டுக்குள்ளே இருந்து கொரோனாவையும் விரட்டுவோம் என தன்னம்பிக்கையுடன் சூளுரைத்தனர்.
ஊரடங்க உத்தரவால் வீட்டுக்குள்ளே முடங்கி இருக்கும் பெரியவர்கள் முதல் வாலிபர்கள் வரை செல்போன் கையுமாக இருக்கிறார்கள், சிலர் கொரோனா அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் ஊர் சுற்றுகிறார்கள், இவ்வாறான நபர்களுக்கு மத்தியில் இந்த குழந்தைகள் கொரோனா குறித்த தகவலை தினமும் சேகரிப்பதோடு, அதன் தாக்கத்தையும் அறிந்து கவனமாக இருக்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலை போல், மற்றவர்களும் திகழ்ந்து கொரோனாவை விரட்ட எச்சரிக்கையுடன் செயல்படுவோம் என சபதம் ஏற்கலாமே!
படுசுட்டித்தனமாக இருக்கும் குழந்தைகள் வீட்டுக்குள் அங்குமிங்கும் ஓடுவதோடு, பெற்றோரின் பேச்சை காதில் வாங்காமல் செய்யும் சேட்டைகளால், உங்க தொந்தரவு தாங்க முடியலப்பா என்று புலம்பும் பெரியவர்களின் மனக்குமுறலை தான் பெரும்பாலான வீடுகளில் தற்போது கேட்க முடிகிறது.
இந்த குழந்தைகளுக்கு மத்தியில், சில குழந்தைகள் கொரோனா குறித்த தகவலை சேகரிப்பதோடு, அது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள். அதேபோன்று, குமரி மாவட்டம் விரிகோடு கையாண்டவிளை பகுதியில் வசிக்கும் அஸ்மிதா (11), இம்மானுவேல் (7) என்ற அக்காள், தம்பி இருவரும் கொரோனா வைரஸ் குறித்து ஓவியம் வரைவதோடு, வாசகங்களையும் எழுதுகிறார்கள். அதாவது,
* கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்கும் வழிமுறைகள்
* வயதானவர்கள் எதை செய்யக்கூடாது
* கொரோனாவை விரட்ட நாம் என்ன செய்ய வேண்டும்
* கொரோனா குறித்து அரசை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் என விலாவாரியாக வாசகங்களை எழுதியதோடு, அதற்கேற்ப ஓவியத்தையும் தீட்டியுள்ளனர்.
* கொரோனா விதிமுறையை மீறினால் என்னவாகும் என செய்தித்தாளில் வரும் தகவல், படங்களை ‘கட்‘ பண்ணியதோடு, அதனை தங்களுடைய கைவண்ணத்தால் விழிப்புணர்வு வாசகங்களையும் எழுதி, மேலும் உயிரூட்டும் வகையில் ஒட்டி வைத்துள்ளனர்.
இந்த ஆர்வத்தை உணர்ந்த அவர்களுடைய பெற்றோர் ராஜ்குமார், சுமங்கலி ஆகிய இருவரும் தங்களுடைய குழந்தைகளை தட்டிக் கொடுத்து ஊக்குவித்தனர். அதே சமயத்தில், குழந்தைகளின் கொரோனா விழிப்புணர்வு ஓவியம், வாசகங்களை முகநூல், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களிலும் பரப்பினர். இதனை பார்த்த நண்பர்கள், உறவினர்கள் குழந்தைகளின் விழிப்புணர்வு நடவடிக்கையை பாராட்டினர். விழிப்புணர்வு ஏற்படுத்தும் அஸ்மிதா 6-ம் வகுப்பும், இம்மானுவேல் 2-ம் வகுப்பும் படிக்கிறார்கள். இதுகுறித்து இருவரும் கூறுகையில், கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவோம், வீட்டுக்குள்ளே இருந்து கொரோனாவையும் விரட்டுவோம் என தன்னம்பிக்கையுடன் சூளுரைத்தனர்.
ஊரடங்க உத்தரவால் வீட்டுக்குள்ளே முடங்கி இருக்கும் பெரியவர்கள் முதல் வாலிபர்கள் வரை செல்போன் கையுமாக இருக்கிறார்கள், சிலர் கொரோனா அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் ஊர் சுற்றுகிறார்கள், இவ்வாறான நபர்களுக்கு மத்தியில் இந்த குழந்தைகள் கொரோனா குறித்த தகவலை தினமும் சேகரிப்பதோடு, அதன் தாக்கத்தையும் அறிந்து கவனமாக இருக்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலை போல், மற்றவர்களும் திகழ்ந்து கொரோனாவை விரட்ட எச்சரிக்கையுடன் செயல்படுவோம் என சபதம் ஏற்கலாமே!