உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் அதன் வளர்ச்சி தடைப்படுகிறது.
ஊட்டச்சத்து குறைபாடு, உடல் பருமன், ரத்தசோகை உள்பட பிற சுகாதார பிரச்சினைகளை மையப்படுத்தி குழந்தைகளின் ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்யும் வகையில் இந்த அறிக்கை அமைந்திருக்கிறது. உலக அளவில் ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் அதன் வளர்ச்சி தடைபடுகிறது. இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை வைட்டமின்கள், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்புக்குள்ளாவதும், பசியால் வாடுவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் நகர்பகுதியில் 8 சதவீதம் பேரும், கிராமப்புறங்களில் 5 சதவீதம் பேரும் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு உள்ளாகிறார்கள். இந்தியாவில் சுகாதார உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கு ஆய்வறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப் பட்டுள்ளது.