லைஃப்ஸ்டைல்
குழந்தைகளின் கண் பார்வையை அதிகரிக்க இந்த உணவுகளை கொடுங்க...

குழந்தைகளின் கண் பார்வையை அதிகரிக்க இந்த உணவுகளை கொடுங்க...

Published On 2020-09-16 03:10 GMT   |   Update On 2020-09-16 03:10 GMT
இன்றைய காலகட்டத்தில் நிறைய குழந்தைகளுக்கு கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படுகின்றன. உங்கள் குழந்தைகளின் கண் பார்வை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
இன்றைய காலகட்டத்தில் நிறைய குழந்தைகளுக்கு கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படுகின்றன. சிறு வயதிலேயே அவர்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். இதனால் அவர்களால் சரியாகப் படிக்க முடியாமலும், வகுப்பில் கவனம் செலுத்த முடியாமலும் தவிக்கின்றனர். மேலும் அவர்களால் மற்ற குழந்தைகளைப் போல விளையாட முடியாமலும் போகிறது. கண்ணாடி உட்படப் பல மருத்துவ தீர்வுகள் கண் பார்வை பிரச்சனைக்கு இருந்தாலும் வரும் முன் காப்பது பெற்றோர்களின் தலையாய கடமையாகும். உங்கள் குழந்தைகளின் கண் பார்வை அதிகரிக்க சாப்பிட வேண்டிய 9 உணவுகள்!

* முட்டையில் இருக்கும் ஜின்ங்க் மற்றும் லுடீன் போன்ற சத்துக்கள் கண் குறைபாடு ஏற்படாமல் பெரிதளவு காக்கிறது. முட்டைக் கருவில் உள்ள 'ஸிக்ஸாந்தின்' புற ஊதா கதிர் வீச்சின் பாதிப்புகளிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது. இதனால் உங்கள் கண் பார்வை ஆரோக்கியமாகிறது.

* ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கண் பார்வைக்கு மிகவும் தேவையானது. இது ரெடினாவின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டிற்குப் பெரிதும் உதவும். கூடுதலாகக் கண்கள் உலர்ந்து போவதைத் தடுக்கிறது. பல வகையான கடல் மீன்களில் இந்த சத்து உட்படப் பல உயிர்ச்சத்துகள் நிறைந்து உள்ளன. குறிப்பாக சால்மன், டுனா ,மேக்கிரல், ட்ராவுட் போன்ற மீன் ரகங்களைக் கூறலாம்.

* பச்சைக் கீரை வகைகளில் அதிகம் வைட்டமின் சி மற்றும் இ சத்து நிறைந்துள்ளன. மேலும் இதில் கரோட்டினாய்டுகள் மற்றும் லியூடீன் ஆகிய சத்துக்களும் நிறைந்துள்ளன. குறிப்பாகப் பொன்னாங்கண்ணி, முருங்கை, பசலை, புதினா, பிரோக்கோலி போன்ற கீரை வகைகளில் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைவாக உள்ளது. இதனால் இதைத் தொடர்ந்து உட்கொள்வதால் நீண்ட கால கண் நோய்களை வரவிடாமல் தடுக்கவும் குணப்படுத்தவும் முடிகிறது.

* இதில் பீடாகரோடின் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளன. இதை உணவில் அதிக அளவு எடுத்துக் கொள்வதாலும் கண் பார்வை மேம்படும்.

* மாம்பழம், ஆரஞ்சு, காரட், எலுமிச்சை போன்ற பழங்களில் அதிக ஊட்டச்சத்து ஏ நிறைந்துள்ளது. இதனால் இரவில் பார்வை பிரகாசமாகத் தெரியும். மேலும் இந்தப் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் கண்களோடு இணைந்திருக்கும் மற்ற தசைகளும் சத்து பெறும். தினம் பச்சையாக ஒரு காரட்டை உண்பதால் கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வராமல் தப்பித்துக் கொள்ளலாம்.

* சூரிய காந்தி விதையில் நிரம்பியுள்ள ஊட்டச்சத்து இ மற்றும் ஜிங்க் கண் கோளாறு வராமல் தவிர்க்க உதவுகின்றன. இவை பல்வேறு கடைகளில் விற்பனையாகி வருகின்றன. வாங்கி பலன் அடையலாம்.

* காலிஃளாரில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் கண் பார்வைக்கு மிகவும் உகந்தது. ஆக இதை உணவில் அடிக்கடி சேர்ப்பது நன்மைப் பயக்கும். பொதுவாகவே குழந்தைகள் காலிஃளாரை விரும்பி உண்பார்கள்.

* நாவல் பழம் மற்றும் திரட்சைப்பழங்களில் ஆந்தோசையனின் அதிகம் உள்ளதால் இரவு நேரத்திலும், இருட்டாக இருக்கும் இடங்களிலும் உங்கள் கண்கள் நன்றாகப் பார்வைப் பெற உதவும். இது கண் சோர்வைக் குறைக்கும். ரெட்டினா சிதைவுறாமல் பாதுகாக்கப்படுகிறது. மேலும் இந்தப் பழங்களில் குரோசிடின், ரெஸ்வெராட்ரால், செலினியம் மற்றும் ஜின்க் அதிக அளவில் இருப்பதால் உங்கள் கண்கள் நல்ல ஆரோக்கியம் பெரும்.

* கண் பார்வைக் கோளாறுகளைக் குணப்படுத்த முட்டைகோஸை அதிகம் உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். குறிப்பாகச் சிவப்பு முட்டைகோஸ் கண் பார்வை வளத்திற்குப் பெரிதும் துணைபுரிகிறது. இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ அதிகம் உள்ளதால் உங்கள் கண் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்.
Tags:    

Similar News