லைஃப்ஸ்டைல்
மாணவர்களின் கல்வியை பாதித்த கொரோனா..

மாணவர்களின் கல்வியை பாதித்த கொரோனா..

Published On 2020-08-14 03:52 GMT   |   Update On 2020-08-14 03:52 GMT
கொரோனா நோய் தொற்று ஏற்படுத்தி இருக்கும் அச்சுறுத்தல் கல்வி திட்டத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பள்ளிப்பாடத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் வித்திட்டிருக்கிறது.
கொரோனா நோய் தொற்று ஏற்படுத்தி இருக்கும் அச்சுறுத்தல் கல்வி திட்டத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பள்ளிப்பாடத்திட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் வித்திட்டிருக்கிறது. பள்ளிக்கூடங்களை திறப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் நிறைய பள்ளிக்கூடங்கள் ஆன்லைன் வழியாக பாடம் நடத்தும் நடைமுறையை பின்பற்ற தொடங்கி இருக்கின்றன. வகுப்பறையில் நேருக்கு நேர் மாணவர்களை அமர்த்தி பாடங்களை விளக்கி புரியவைப்பதற்கு பதிலாக வீடியோக்கள் வழியாக வீடுகளில் அமர்ந்திருந்தே கல்வி போதிக்கும் நடைமுறையை கையாளுகிறார்கள். இத்தகைய இணையவழி அணுகுமுறை மாணவர்களிடத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும், கற்றல் வழியிலும் புதிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

“மாணவர்கள் அணுகக்கூடிய டிஜிட்டல் வழி கற்பித்தல் முறை கிராமப்புற மாணவர்கள் மத்தியில் சமத்துவமின்மை, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். டிஜிட்டல் நுட்பங்களை கையாள்வதற்கு சிறுவர் களுக்கு கிடைக்கும் சலுகை பெண் குழந்தைகளுக்கு கிடைத்திருக்காது” என்று சமீபத்திய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

“இந்தியாவில் தொழில்நுட்பங்களை கையாளும் விஷயத்தில் பெரும்பாலும் பெண் கள் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கல்வி ஆராய்ச்சி அதிகாரி ரியானான் மூர் கூறுகிறார். இதே கருத்தை மூத்த கல்வி ஆராய்ச்சியாளர் லிடியா மார்ஷலும் முன்வைக்கிறார். மேலும் அவர்கள் இருவரும் கூறுகையில், “இந்தியா முழுவதும் வீடு மற்றும் இருப்பிடத்தை பொறுத்து டிஜிட்டல் வழி அணுகுமுறை கணிசமாக வேறுபடுகிறது. பாலின சமத்துவமின்மையும் நிலவுகிறது. சிறுவர்கள் தங்கள் சகமாணவிகளை விட கணினி, ஸ்மார்ட்போன் போன்ற பிற தொழில்நுட்பங்கள் வழியாக இணையத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தியாவில் கிராமப்புறங்களில் ஐந்தில் நான்கு பேர் இணையதளத்தை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள். ஐந்தில் மூன்று பேர் கம்ப்யூட்டர் பயன்படுத்தாத நிலையில் இருக்கிறார்கள். வசதியானவர்கள் அல்லது நகர்ப்புற வீடுகளில் வசிக்கும் சிறுவர் சிறுமிகளை விட கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழ்மையான சிறுவர்-சிறுமியர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த அறிவு குறைவாகவே இருக்கிறது” என்கிறார்கள்.

தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாகக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.கோவிந்தா கூறுகையில், “கொரோனாவுக்கு பிறகு பள்ளிப்படிப்பு மாறப்போகிறது. டிஜிட்டல் தலையீடுகள் காரணமாக, எதிர்காலத்தில் கிராமப்புறங்களில் ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தொழில்நுட்பம் பணக்காரர்களுக்கோ அல்லது நடுத்தர வர்க்கத்துக்கோ வேண்டுமானால் ஏற்றதாக இருக்கலாம். வகுப்பில் ஒரு ஆசிரியரின் நேரடி பயிற்சிக்கு மாற்றாக வேறு எதுவும் இருக்க முடியாது. நேருக்கு நேர் பாடம் கற்பிக்கும் பயிற்சிக்கு மாற்றுமுறையை டிஜிட்டல் நுட்பத்தால் தரமுடியாது” என்கிறார்.

டெல்லி பல்கலைக்கழக கல்வியாளர் பேராசிரியர் அமிதா ராம்பால், “ஊடரங்குக்கு பிறகு சுமார் 20 சதவீத பெண் குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கூடம் செல்லமாட்டார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பெரும் பாலான குழந்தைகள்தான் அதிகம் பாதிப்புக்குள்ளாவார்கள். அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் தவறான நடைமுறையும் உருவாக வாய்ப்பு இருக்கிறது” என்கிறார். 
Tags:    

Similar News