லைஃப்ஸ்டைல்
குழந்தைகளின் வாய் வழி சுவாசம்

குழந்தைகளின் வாய் வழி சுவாசத்திற்கு காரணம்

Published On 2020-08-13 04:02 GMT   |   Update On 2020-08-13 04:02 GMT
குழந்தைகளின் சுவாசப்பாதையில் நாசிப் பகுதியை பிரிக்கும் குருத்து எலும்புகள் வலுவில்லாமல் இருந்தாலும் வாய் வழி சுவாசம் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
குழந்தைகள் சில சமயங்களில் வாயை திறந்த நிலையில் வைத்தபடி தூங்கிக்கொண்டிருப்பார்கள். அப்போது சுவாசம் மூக்கு வழியாக உள்ளிழுக்கப்பட்டு வெளியாகுவதற்கு பதிலாக வாய் வழியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும். அப்படி தூங்குவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

சுவாச பாதையில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டிருந்தால் மூக்கு வழியாக சுவாசிப்பதற்கு சிரமப்படுவார்கள். அதனால் வாய் வழியாக மூச்சுவிடலாம். சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கும்போது சுவாசப் பாதை அடைப்பட்டு விடுகிறது. அப்போது சுவாசிக்க வாயை உபயோகிப்பார்கள்.

குழந்தைகளின் சுவாசப்பாதையில் நாசிப் பகுதியை பிரிக்கும் குருத்து எலும்புகள் வலுவில்லாமல் இருந்தாலும் வாய் வழி சுவாசம் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மூக்கின் வழியாக சுவாசிப்பதுதான் நல்லது. ஏனெனில் மூக்கின் வழியாக உள்ளிழுக்கப்படும் காற்றில் படிந்திருக்கும் தூசுகளை நாசிப் பகுதி நீக்கி சுத்தம் செய்தே உள்ளே அனுப்பும்.

ஆனால் வாய் வழியாக சுவாசிக்கும்போது தூசுக்கள், அழுக்குகள், வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுக்கிருமிகள் நேரடியாக உள்ளிழுக்கப்பட்டுவிடும். அதனால் சுவாச பாதையில் தொற்றுகள் உருவாகக்கூடும். குழந்தைகள் எப்போதாவது வாய் வழியாக சுவாசித்தால் பிரச்சினை இல்லை. ஆனால் அடிக்கடி அவ்வாறு செய்தால் அலட்சியமாக இருக்கக்கூடாது. மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
Tags:    

Similar News