லைஃப்ஸ்டைல்
மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்
ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இதற்காக வாட்ஸ்-அப் மூலம் மாணவர்களுக்கு வினாக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த புதிய யுக்திக்கு பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அதேபோன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது.
தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதால், மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தப்படாமல் இருக்கிறது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கூடங்கள் திறந்த பிறகு தேர்வை சந்திப்பது மிகவும் சிரமமான காரியம்.
இதனால் தனியார் பள்ளிக்கூடங்கள் புதிய யுக்தியை கையாள தொடங்கி உள்ளன. அதாவது, ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறையை ஆரம்பித்து இருக்கின்றனர். வாட்ஸ்-அப் மூலம் பாடங்கள், வினா வங்கிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனை வைத்து மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
சில பள்ளி, கல்லூரிகளில் பிரத்யேக செல்போன் செயலிகள் உருவாக்கி, அதன்மூலம் மாணவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துரையாடல், சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டல் உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சில தொடக்க பள்ளிக்கூடங்களில் வீடியோகால் மூலம் பாடல்கள், அடிப்படை கல்வி ஆகியவை ஆடல், பாடலுடன் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கு இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ? என்று காத்திருக்கும் நிலையில், வீட்டில் இருந்தபடியே கல்வியை கற்பிக்கும் பணிகளில் கல்வி நிறுவனங்கள் ஈடுபட தொடங்கி இருப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதால், மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தப்படாமல் இருக்கிறது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கூடங்கள் திறந்த பிறகு தேர்வை சந்திப்பது மிகவும் சிரமமான காரியம்.
இதனால் தனியார் பள்ளிக்கூடங்கள் புதிய யுக்தியை கையாள தொடங்கி உள்ளன. அதாவது, ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறையை ஆரம்பித்து இருக்கின்றனர். வாட்ஸ்-அப் மூலம் பாடங்கள், வினா வங்கிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனை வைத்து மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
சில பள்ளி, கல்லூரிகளில் பிரத்யேக செல்போன் செயலிகள் உருவாக்கி, அதன்மூலம் மாணவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துரையாடல், சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டல் உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சில தொடக்க பள்ளிக்கூடங்களில் வீடியோகால் மூலம் பாடல்கள், அடிப்படை கல்வி ஆகியவை ஆடல், பாடலுடன் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கு இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ? என்று காத்திருக்கும் நிலையில், வீட்டில் இருந்தபடியே கல்வியை கற்பிக்கும் பணிகளில் கல்வி நிறுவனங்கள் ஈடுபட தொடங்கி இருப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.