பெண்கள் உலகம்
வீட்டில் செல்லப்பிராணி வளர்ப்பது, குடும்பத்தில் உள்ள பலருக்கும் நன்மை செய்யக்கூடியது. செல்லப்பிராணி மற்றும் வளர்ப்பு பிராணிகளைப் பற்றியும், அவை வழங்கும் நன்மைகளையும் கொஞ்சம் தெரிந்துகொள்வோமா..
குட்டீஸ்.. நீங்கள் வீட்டிற்கு செல்லப்பிள்ளைகள் என்றால், உங்களுடைய செல்லப்பிள்ளைகள் நீங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகள்தானே? வீட்டில் செல்லப்பிராணி வளர்ப்பது, குடும்பத்தில் உள்ள பலருக்கும் நன்மை செய்யக்கூடியது. செல்லப்பிராணி மற்றும் வளர்ப்பு பிராணிகளைப் பற்றியும், அவை வழங்கும் நன்மைகளையும் கொஞ்சம் தெரிந்துகொள்வோமா..
உங்கள் வீட்டில் என்ன செல்லப்பிராணி உள்ளது? நாய், பூனை, கிளி, லவ்பேர்ட்ஸ், மீன்கள் என ஏராளமாக அடுக்கிக்கொண்டே செல்லலாம். இவை தவிர ஆடு, மாடு, கோழிகளை வளர்ப்பு பிராணி களாகவும், பொருளாதார ரீதியான தேவைகளுடனும் செல்லப் பிராணிகள்போல பராமரிக்கும் விவசாய குடும்பங்களும் நம்மிடையே அதிகம். அப்படி, உங்கள் வீட்டில் ஒரு செல்லப்பிராணியோ, வளர்ப்பு பிராணியோ இருந்தால், அது உங்கள் மகிழ்ச்சியை பல மடங்கு அதிகரிக்கும். வாழ்க்கையில் மதிப்பை உண்டாக்கும் என்று கருதப்படுகிறது. வளர்ப்பு பிராணிகள், சமூகத்தோடு நெருங்கிய பிணைப்பு ஏற்படுத்தும் மனப்பாங்கை வளர்க்கும்.
நீங்கள் மாடு, ஆடு, நாயுடன் வெளியே செல்லும்போதும், உங்கள் பூனையுடன் விளையாடும்போதும் மற்றவர்களின் நலம் விசாரிப்பும், பேச்சும் இயல்பாக ஆரம்பிப்பதை பார்க்கலாம். மற்ற நேரத்தில் ‘எங்கே போகிறீர்கள்?’ என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதால், பலர் விசாரிக்க விரும்பாமல் போகலாம். ஆனால் கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளுடன் செல்லும்போது, “என்ன மேய்ச் சலுக்கா?”, “பால்காரம்மா கிளம்பிட்டாங்க...”, “என்ன மாட்டிற்கு உடம்பு சரியில்லையா?” என்று இயல்பான நலம் விசாரிப்பும், நட்புறவும் வளர்வதை உணரலாம்.
செல்லப்பிராணிகள், வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பதில் பல இன்னல்கள், சவால்கள் உள்ளன. அதை அன்றாடம் எதிர்கொள்வது வாழ்வில் வரும் சாவாலான தருணங்களையும் தடுமாறாமல் எதிர்கொள்ளும் உளவியல் பண்பை தந்துவிடுகிறது. செல்லப்பிராணிகள், வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பது நம்மை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். கால்நடைகளும், செல்லப்பிராணிகளும் துரு துருவென செயல்படக்கூடியதாகும். செல்லப்பிராணிகள், சாதாரணமாக சோம்பி கிடப்பதில்லை. நாம் அதை நெருங்கிச் செல்கிறோம் என்றாலே, அது சுறுசுறுப்பாக விளையாடவும் செயல்படவும் தொடங்கிவிடுவதை நாம் கவனிக்கலாம். அந்த நேரத்தில் அவற்றின் சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக்கொள்ளும். நம்மை விறுவிறுப்பாக செயல்பட வைக்கும். உதாரணமாக நாய் வளர்ப்பவர்கள், கட்டாயம் நடைப்பயிற்சி மேற்கொள்வதாகவும், மற்றவர்களைவிட கூடுதலாக நடைப்பயிற்சி செய்வதாகவும் ஒரு ஆய்வு சொல்கிறது.
செல்லப்பிராணி வளர்ப்பதால் நமது தகவல் தொடர்புத்திறனும் நுட்பமாக வளர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாம் அவற்றுடன் பழகும்போது, தொடுதல், சைகை கட்டளை மூலமாக நமது எண்ணங்களை அவற்றுக்கு உணர்த்து கிறோம். அதேபோல அவற்றின் ஒவ்வொரு விதமான குரலுக்கும், அசைவுக்கும் நாமும் பொருள் புரிந்து கொள்கிறோம். இந்த நுட்பமானது சமூக செயல்பாட்டின்போதும் மற்றவர்களின் உணர்வுகளை துல்லியமாக புரிந்து கொள்ளவும், பரிவு, பாசம் காட்டவும் காரணமாக அமைகிறது.
செல்லப்பிராணிகள் நாம் அமைதியாக இருக்கவும், பரபரப்பு இன்றி தளர்வாக நிதானமாக செயல்படவும் காரணமாக அமைகின்றன. இறுக்கமான மனநிலையில் இருந்து மகிழ்ச்சியான மனநிலைக்கு நம்மை மாற்றுவது செல்லப்பிராணிகள்தான். செல்லப்பிராணிகள் வளர்ப்பு, வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமையும். அத்தகைய நேர்மறை எண்ணங்களை விலங்குகளின் பாச உணர்வு நமக்குள் தூண்டும்.
வயதான பலருக்கும், வளர்ப்பு பிராணிகள் நல்ல துணையாக விளங்குகின்றன. பல நேரங்களில் அவை நட்பாகவும், பாசமுள்ள உறவாகவும் இருக்கின்றன. இது நோய்வாய்ப்பட்ட முதியவர்களுக்கு ஆறுதல் தருவதாகவும், ஆரோக்கியம் வழங்குவதாகவும் உள்ளதாக பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
செல்லப்பிராணிகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் வாழ்வியல் சார்ந்ததாகவும், பொருளாதாரம் சார்ந்ததாகவும் உள்ளது. நாய்கள், பூனைகள், முயல்கள், கிளிகள், பறவைகள் என பலவற்றை செல்லப்பிராணியாக வளர்க்கிறோம். இதுபோல ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட மேலும் சில பிராணிகளை வளர்ப்பு பிராணிகளாகவும் வளர்க்கிறோம். வளர்ப்பு பிராணிகள் சார்ந்தும், செல்லப்பிராணிகள் சார்ந்தும் பல்வேறு தொழில்கள் உள்ளன. அவற்றின் மூலம் பலரது வாழ்க்கை வளம்பெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உங்கள் வீட்டில் என்ன செல்லப்பிராணி உள்ளது? நாய், பூனை, கிளி, லவ்பேர்ட்ஸ், மீன்கள் என ஏராளமாக அடுக்கிக்கொண்டே செல்லலாம். இவை தவிர ஆடு, மாடு, கோழிகளை வளர்ப்பு பிராணி களாகவும், பொருளாதார ரீதியான தேவைகளுடனும் செல்லப் பிராணிகள்போல பராமரிக்கும் விவசாய குடும்பங்களும் நம்மிடையே அதிகம். அப்படி, உங்கள் வீட்டில் ஒரு செல்லப்பிராணியோ, வளர்ப்பு பிராணியோ இருந்தால், அது உங்கள் மகிழ்ச்சியை பல மடங்கு அதிகரிக்கும். வாழ்க்கையில் மதிப்பை உண்டாக்கும் என்று கருதப்படுகிறது. வளர்ப்பு பிராணிகள், சமூகத்தோடு நெருங்கிய பிணைப்பு ஏற்படுத்தும் மனப்பாங்கை வளர்க்கும்.
நீங்கள் மாடு, ஆடு, நாயுடன் வெளியே செல்லும்போதும், உங்கள் பூனையுடன் விளையாடும்போதும் மற்றவர்களின் நலம் விசாரிப்பும், பேச்சும் இயல்பாக ஆரம்பிப்பதை பார்க்கலாம். மற்ற நேரத்தில் ‘எங்கே போகிறீர்கள்?’ என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியிருப்பதால், பலர் விசாரிக்க விரும்பாமல் போகலாம். ஆனால் கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளுடன் செல்லும்போது, “என்ன மேய்ச் சலுக்கா?”, “பால்காரம்மா கிளம்பிட்டாங்க...”, “என்ன மாட்டிற்கு உடம்பு சரியில்லையா?” என்று இயல்பான நலம் விசாரிப்பும், நட்புறவும் வளர்வதை உணரலாம்.
செல்லப்பிராணிகள், வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பதில் பல இன்னல்கள், சவால்கள் உள்ளன. அதை அன்றாடம் எதிர்கொள்வது வாழ்வில் வரும் சாவாலான தருணங்களையும் தடுமாறாமல் எதிர்கொள்ளும் உளவியல் பண்பை தந்துவிடுகிறது. செல்லப்பிராணிகள், வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பது நம்மை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும். கால்நடைகளும், செல்லப்பிராணிகளும் துரு துருவென செயல்படக்கூடியதாகும். செல்லப்பிராணிகள், சாதாரணமாக சோம்பி கிடப்பதில்லை. நாம் அதை நெருங்கிச் செல்கிறோம் என்றாலே, அது சுறுசுறுப்பாக விளையாடவும் செயல்படவும் தொடங்கிவிடுவதை நாம் கவனிக்கலாம். அந்த நேரத்தில் அவற்றின் சுறுசுறுப்பு நம்மையும் தொற்றிக்கொள்ளும். நம்மை விறுவிறுப்பாக செயல்பட வைக்கும். உதாரணமாக நாய் வளர்ப்பவர்கள், கட்டாயம் நடைப்பயிற்சி மேற்கொள்வதாகவும், மற்றவர்களைவிட கூடுதலாக நடைப்பயிற்சி செய்வதாகவும் ஒரு ஆய்வு சொல்கிறது.
செல்லப்பிராணி வளர்ப்பதால் நமது தகவல் தொடர்புத்திறனும் நுட்பமாக வளர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாம் அவற்றுடன் பழகும்போது, தொடுதல், சைகை கட்டளை மூலமாக நமது எண்ணங்களை அவற்றுக்கு உணர்த்து கிறோம். அதேபோல அவற்றின் ஒவ்வொரு விதமான குரலுக்கும், அசைவுக்கும் நாமும் பொருள் புரிந்து கொள்கிறோம். இந்த நுட்பமானது சமூக செயல்பாட்டின்போதும் மற்றவர்களின் உணர்வுகளை துல்லியமாக புரிந்து கொள்ளவும், பரிவு, பாசம் காட்டவும் காரணமாக அமைகிறது.
செல்லப்பிராணிகள் நாம் அமைதியாக இருக்கவும், பரபரப்பு இன்றி தளர்வாக நிதானமாக செயல்படவும் காரணமாக அமைகின்றன. இறுக்கமான மனநிலையில் இருந்து மகிழ்ச்சியான மனநிலைக்கு நம்மை மாற்றுவது செல்லப்பிராணிகள்தான். செல்லப்பிராணிகள் வளர்ப்பு, வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமையும். அத்தகைய நேர்மறை எண்ணங்களை விலங்குகளின் பாச உணர்வு நமக்குள் தூண்டும்.
வயதான பலருக்கும், வளர்ப்பு பிராணிகள் நல்ல துணையாக விளங்குகின்றன. பல நேரங்களில் அவை நட்பாகவும், பாசமுள்ள உறவாகவும் இருக்கின்றன. இது நோய்வாய்ப்பட்ட முதியவர்களுக்கு ஆறுதல் தருவதாகவும், ஆரோக்கியம் வழங்குவதாகவும் உள்ளதாக பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
செல்லப்பிராணிகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் வாழ்வியல் சார்ந்ததாகவும், பொருளாதாரம் சார்ந்ததாகவும் உள்ளது. நாய்கள், பூனைகள், முயல்கள், கிளிகள், பறவைகள் என பலவற்றை செல்லப்பிராணியாக வளர்க்கிறோம். இதுபோல ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட மேலும் சில பிராணிகளை வளர்ப்பு பிராணிகளாகவும் வளர்க்கிறோம். வளர்ப்பு பிராணிகள் சார்ந்தும், செல்லப்பிராணிகள் சார்ந்தும் பல்வேறு தொழில்கள் உள்ளன. அவற்றின் மூலம் பலரது வாழ்க்கை வளம்பெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.