லைஃப்ஸ்டைல்
குழந்தை வளர்ப்பில் அலட்சியம் காட்டாதீங்க

குழந்தை வளர்ப்பில் அலட்சியம் காட்டாதீங்க

Published On 2020-01-27 05:27 GMT   |   Update On 2020-01-27 05:27 GMT
இன்றைய தம்பதியினர் வேலைக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர். இதனால் குழந்தை வளர்ப்பில் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால், குழந்தைகள் தவறான வழிகளில் செல்ல நேரிடுகிறது.
இன்றைய தம்பதியினர் குழந்தை பெற்றுக்கொள்வதை விட அவர்களின் வேலைக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர். குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கும் போது, அவர்கள் அவர்களின் வேலையின் முக்கிய தருணத்தில் இருப்பார்கள். இதனால் குழந்தை வளர்ப்பில் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால், குழந்தைகள் தவறான வழிகளில் செல்ல நேரிடுகிறது. இதுவே அவர்களுக்கு பழக்கம் ஆவதால், அவர்கள் ஒழுக்கமற்றவாறு நடந்துகொள்கின்றனர். அதனால், உங்கள் பிள்ளைகள் தவறான வழியில் செல்கின்றனர் என்பதை காட்டும் அறிகுறிகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

1. எல்லா குழந்தைகளுக்கும் பொம்மை வேண்டும் என்று எண்ணுவர், ஆனால் உங்கள் பிள்ளைக்கு கிடைக்காத எல்லா பொருளுக்கும் அவர்கள் அழுதாலோ அல்லது உங்களை அடித்தாலோ அல்லது கத்தினார்கள் என்றால் அவர்கள் எல்லாம் பெற வேண்டும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இந்நடத்தையை ஊக்குவித்தல், அது அவர்களை மேலும் கெடுக்கும்.

இந்நேரத்தில் அவரிடம் கோபத்தை காட்டாமல் இருத்தல் முக்கியம் ஆகும். பொறுமையாக அவர்களிடம் அவர்கள் செய்வது தவறு என்று எடுத்துக் கூறுங்கள். தீங்கற்ற தண்டணையை தருவீர்கள் என்றால், அவர்களிடம் இருந்து ஒரு சலுகையை எடுத்துக்கொள்ளுங்கள்.

2. சிறுவயதில் குழந்தைகள் அவர்களின் உடமைகள் மீது போஸ்சஸிவ் ஆக இருப்பார்கள், அதனால் அவர்களுக்கு பதிலுக்கு எதுவும் கிடைக்கும் வரையில் எதையும் பகிரமாட்டார்கள். இதனை முதலில் கண்டுகொள்ளும் போதே சரி செய்ய வேண்டும். பகிர்ந்தல் என்பது கற்றுக்கொண்ட பழக்கமே என்று உளவியல் நிபுணர்கள் நம்புகின்றன.

பகிர்ந்தல் என்பது ஒருவாறு கற்றுக்கொள்ளும் பழக்கம் என்பதால், நீங்கள் பகிர்ந்துக் காட்டுங்கள். எவ்வாறு பகிர வேண்டும் என்றும், பகிர்ந்தால் பாராட்டவும் செய்யுங்கள்.

3. விழித்தது முதல் தூங்கும் வரை அவர்கள் சிணுங்கினால், அது அவர்கள் மீது கோவம் கொள்ளுவதுமல்லாமல், வருங்காலத்தில் மற்றவரிடம் பழக கூட தடையாக இருக்கும். தன் குடும்பத்தை தவிர மற்றவர்கள் இந்த பழக்கத்தை சகித்து கொள்ளாமல், அவர்களை தனிமையில் விடுவர்.

சிணுங்குதல் என்பது, பெற்றோர்களை பிள்ளைகள் கையாளும் வழியாகும். அதனால், அவர்கள் சாதாரணமாக பேசும் வரை அவர்களை கண்டுகொள்ளாதீர். “இவ்வாறு பேசினால் எனக்கு புரியாது” என்று சொல்வதும் உதவும். உங்கள் பிள்ளை சிணுங்கப்போகிறார்கள் என்று முன்னமே அறிந்தால், அதற்கு ஏற்றவாறு தயாராகிக் கொள்ளுதலும் உதவும்.

4. இது என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இதனை உடனே திருத்த வேண்டும். இது தாத்தா மற்றும் சித்தியுடன் ஆனா உறவை பாதிப்பது மட்டுமல்லாமல், பள்ளியிலும் அவர்களை பிரச்னைக்கு உள்ளாக்கும்.

இது மற்றவர்களை எவ்வாறு பாதிக்கும் என்று எடுத்துக் கூறுங்கள். மற்றவரிடம் அவ்வாறு பேசவோ நடந்துக் கொள்ளவோ கூடாது என்று சொல்லுங்கள். இதனை கண்டிக்காமல் இருந்தால், அவர்களுக்கு துணைச் செல்வது போல் ஆகிவிடும்.

5. நீங்கள் வெளியே செல்லும் போது உங்கள் குழந்தை அழுவதற்கு கஷ்டமாகத் தான் இருக்கும். அதற்காக உங்கள் திட்டங்களை ரத்து செய்ய வேண்டாம். உங்கள் குழந்தைகளே உங்கள் முடிவுக்கு காரணமாக இருக்க கூடாது. சில விஷயங்களை நீங்கள் தனியாகவோ அல்லது உங்கள் துணையுடன் தான் செய்ய வேண்டும். இது உங்கள் இருவரையும் குழந்தைக்கு முன் இருந்ததை போல் உணர வைக்கும். உங்கள் குழந்தைகளை உங்கள் முடிவுக்குக் காரணம் ஆக்குவது, உங்களின் எண்ணம் அவர்களை சுற்றி தான் இருக்கும் என்று அவர்களை உணர வைக்கும்.

அவர்களை “குட் பை” சொல்ல பழக்குங்கள். அவர்கள் வருத்தம் அடைந்தால், உங்கள் திட்டத்தை ரத்து செய்யாமல் சிறிது நேரத்தில் திரும்பி வருவேன்னு என்று சொல்லுங்கள்.
Tags:    

Similar News