லைஃப்ஸ்டைல்
குழந்தைகளின் ஸ்மார்ட்போன் பழக்கத்திற்கு பெற்றோர்களே காரணம்
குழந்தைகள் ஸ்மார்ட்போன் பழக்கத்திற்கு அடிமையாக பெற்றோர் எந்த வழிகளில் காரணமாக இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
சில வீடுகளில் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போனை பயன்படுத்த கொடுக்கிறார்கள். இதனால் அவர்களின் சுபாவம், நடத்தை எல்லாம் பெருமளவில் மாற்றம் அடையும். போனில் வீடியோகேம்ஸ் விளையாடிப் பழகி, அதற்கு அடிமையாகி விடுவார்கள். ஒரே இடத்தில் உட்கார்ந்து கேம்ஸ் விளையாடுவார்கள்.
இயற்கையான விளையாட்டுகளின் மீது உள்ள மோகம் குறைந்துவிடும். பருமன் பிரச்னையும் ஏற்படும். அதனால் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போனை கொடுக்கும் போது Flight modeல் கொடுக்க வேண்டும். அப்போது கேம்ஸ் போன்ற சில ஆப்ஷன்களை பயன்படுத்த முடியாது.
குழந்தைகளை ஸ்மார்ட்போன் பழக்கத்திற்கு அடிமையாக பெற்றோர் எந்த வழிகளில் காரணமாக இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
* குழந்தைகள் ஸ்டைலாக செல்போன் பிடித்துப் பேசுகிறார்கள் என்பதற்காக பிஞ்சுப் பருவத்திலேயே அவர்களிடம் போனைக் கொடுப்பதுதான் தவறின் அடிப்படை.
* தூரத்தில் இருக்கும் தந்தையுடனும், உறவுகளுடனும் பேசுகிறார்கள் என்று போனை கொடுத்துப் பேசப் பழக்குவது பெற்றோர் செய்யும் பெரும் தவறு. இவையே தவறான பழக்கத்திற்கு அடிகோலுகிறது.
* அழும் குழந்தைகளை சமாதானப்படுத்துவதாகவும், வேடிக்கை காட்டி உணவு ஊட்டுவதற்காகவும் ஸ்மார்ட்போன்களை அவர்களின் கைகளில் கொடுப்பதும் குழந்தைகள் ஸ்மார்ட்போன் அடிமைகளாகக் காரணம். ரைம்ஸ் கற்கிறார்கள் என்று போனைக் குழந்தைகளிடம் கொடுப்பதும் இந்த வகைத் தவறுதான்.
* செயல்பாடு இல்லாத குழந்தைகள்தான் சேட்டை செய்யும். குழந்தைகளின் சேட்டைகளை குறைப்பதற்காக அவர்களின் கைகளில் செல்போன்களைக் கொடுத்து அவர்களை சேற்றில் மூழ்க வைத்துவிடாதீர்கள்.
* குழந்தைகளின் கண்முன்னே பெற்றோர் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்தால் அவர்களும் அந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவார்கள் என்பதுதான் நிபுணர்கள் தரும் முதலும், முடிவுமான அறிவுரை. பெற்றோரின் பழக்க வழக்கத்தில் இருந்தே குழந்தைகள் பெரும்பாலான விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். எனவே உங்கள் குழந்தைகளை ஸ்மார்ட்போன்களிடம் இருந்து விடுவிப்பது பெற்றோரான உங்கள் கைகளில்தான் இருக்கிறது.
இயற்கையான விளையாட்டுகளின் மீது உள்ள மோகம் குறைந்துவிடும். பருமன் பிரச்னையும் ஏற்படும். அதனால் குழந்தைகளிடம் ஸ்மார்ட்போனை கொடுக்கும் போது Flight modeல் கொடுக்க வேண்டும். அப்போது கேம்ஸ் போன்ற சில ஆப்ஷன்களை பயன்படுத்த முடியாது.
குழந்தைகளை ஸ்மார்ட்போன் பழக்கத்திற்கு அடிமையாக பெற்றோர் எந்த வழிகளில் காரணமாக இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
* குழந்தைகள் ஸ்டைலாக செல்போன் பிடித்துப் பேசுகிறார்கள் என்பதற்காக பிஞ்சுப் பருவத்திலேயே அவர்களிடம் போனைக் கொடுப்பதுதான் தவறின் அடிப்படை.
* தூரத்தில் இருக்கும் தந்தையுடனும், உறவுகளுடனும் பேசுகிறார்கள் என்று போனை கொடுத்துப் பேசப் பழக்குவது பெற்றோர் செய்யும் பெரும் தவறு. இவையே தவறான பழக்கத்திற்கு அடிகோலுகிறது.
* அழும் குழந்தைகளை சமாதானப்படுத்துவதாகவும், வேடிக்கை காட்டி உணவு ஊட்டுவதற்காகவும் ஸ்மார்ட்போன்களை அவர்களின் கைகளில் கொடுப்பதும் குழந்தைகள் ஸ்மார்ட்போன் அடிமைகளாகக் காரணம். ரைம்ஸ் கற்கிறார்கள் என்று போனைக் குழந்தைகளிடம் கொடுப்பதும் இந்த வகைத் தவறுதான்.
* செயல்பாடு இல்லாத குழந்தைகள்தான் சேட்டை செய்யும். குழந்தைகளின் சேட்டைகளை குறைப்பதற்காக அவர்களின் கைகளில் செல்போன்களைக் கொடுத்து அவர்களை சேற்றில் மூழ்க வைத்துவிடாதீர்கள்.
* குழந்தைகளின் கண்முன்னே பெற்றோர் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்தால் அவர்களும் அந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுபடுவார்கள் என்பதுதான் நிபுணர்கள் தரும் முதலும், முடிவுமான அறிவுரை. பெற்றோரின் பழக்க வழக்கத்தில் இருந்தே குழந்தைகள் பெரும்பாலான விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். எனவே உங்கள் குழந்தைகளை ஸ்மார்ட்போன்களிடம் இருந்து விடுவிப்பது பெற்றோரான உங்கள் கைகளில்தான் இருக்கிறது.