லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு சிப்ஸ் வேண்டாமே

Published On 2016-09-08 05:08 GMT   |   Update On 2016-09-08 05:08 GMT
வளரும் குழந்தைகள் உப்பு நிறைந்த நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதால் அவர்களின் எதிர்காலத்திற்கு அது ஆபத்தை விளைவிக்கிறது.
வளரும் குழந்தைகள் உப்பு நிறைந்த நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதால் அவர்களின் எதிர்காலத்திற்கு அது ஆபத்தை விளைவிக்கிறது.

குழந்தைகள் ஒருநாளைக்கு 1000 முதல் 1500 மில்லி கிராம் வரை உப்பை எடுத்துக்கொள்ளலாம்.

உப்பின் மூலம் விளையும் பாதிப்புகள் உடல் பருமன் மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றையும் தாண்டி பல உடல் நலக் கேடுகளுக்கு வழிவகுக்கும். அதனால் தான் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் இளம் பருவத்தில் உப்பைக் குறைத்து அல்லது சத்தாண உணவுகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

குழந்தைகள் உப்பு நிறைந்த சிப்ஸ் போன்ற உணவுகளுக்கு அடிமையாகும் வாய்ப்புள்ளது. இது கடைசி வரை தொடரும் ஒரு ஆபத்தான பழக்கமாகவும் மாறலாம்.

இது போன்று பெரிய வயது வரை உப்பிட்ட பண்டங்களை எடுத்துக் கொண்டால் வாதம், சிறுநீரகக் கோளாறுகள், இதயக்கோளாறுகள் மற்றும் அதிக ரத்த அழுத்தம் ஆகியவை பிற்காலத்தில் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகளவு உள்ளது.

பெரும்பாலான பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக அளவிலான சோடியத்தை (உப்பை) கொண்டிருப்பதால் உங்கள் குழந்தைகளை இதுப்போன்ற உணவுகளிலிருந்து தள்ளியிருக்கச் செய்வது மிகவும் அவசியம்.

இளம் பருவத்தில் அவர்களுக்கு காய்கறி மற்றும் பழங்களை அதிக அளவு ஊட்டுவதன் மூலம் அவர்கள் உணவுகளுக்காக ஏங்குவதைத் தவிர்த்து ஆரோக்கியமாக வளர்வதை உறுதி செய்ய முடியும்.

உங்கள் குழந்தை ஆரோக்கியமாக வளர வேண்டுமெனில், சிறுவயதில் இருந்தே உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

இதனால் வளர வளர அவர்களுக்கு உப்பு அதிகம் நிறைந்த உணவுகளின் மீது நாட்டம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

Similar News