லைஃப்ஸ்டைல்

சத்தான சுவையான ராஜ்மா சாதம்

Published On 2016-07-11 06:22 GMT   |   Update On 2016-07-11 06:22 GMT
ராஜ்மாவில் கால்சியம், இரும்புச்சத்து சிறந்த அளவில் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் ஏற்றது. ராஜ்மா சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பொன்னி அரிசி - 2 கப்,
தேங்காய்ப் பால் - 4 கப்,
ராஜ்மா - 2 கப்,
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,
நறுக்கிய பச்சை மிளகாய் - 2,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப,
கொத்தமல்லி - அலங்கரிக்க.

செய்முறை  :

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ராஜ்மாவை முதல் நாள் இரவு அல்லது 10 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த தண்ணீரையே விட்டு, பிரஷர் குக்கரில் வேக வைக்கவும்.

* அரிசியை ராஜ்மா வெந்த தண்ணீர், தேங்காய்ப் பாலுடன் கலந்து, 5 கப் தண்ணீர் விட்டு, உப்புச் சேர்த்து வேக வைக்கவும்.

* கடாயில் சிறிது எண்ணெய் சூடானதும், சீரகத்தை வெடித்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளியுடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்கிய பின், வேக வைத்த ராஜ்மாவை சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.

* கடைசியாக வேக வைத்த சாதத்தை இத்துடன் சேர்த்துக் கலந்து, 2 அடுப்பில் மிதமான தீயில் வைத்த பின் கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

* சுவையான சத்தான ராஜ்மா சாதம் ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News