ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் தீர்த்தம்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
இன்று திருவோண விரதம். சுபமுகூர்த்த நாள். சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் தீர்த்தம். சாத்தூர் ஸ்ரீ வெங்கடேசர் தோளுக்கினியானில் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, வைகாசி-25 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பஞ்சமி இரவு 10.55 மணி வரை
பிறகு சஷ்டி
நட்சத்திரம்: திருவோணம் இரவு 10.50 மணி வரை பிறகு அவிட்டம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதரவு
ரிஷபம்-ஆக்கம்
மிதுனம்-அமைதி
கடகம்-முயற்சி
சிம்மம்-கீர்த்தி
கன்னி-பெருமை
துலாம்- லாபம்
விருச்சிகம்-பரிவு
தனுசு- நன்மை
மகரம்-திடம்
கும்பம்-விவேகம்
மீனம்-மேன்மை
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional