null
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 22 ஜூலை 2025
- நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பூந்தேரில் பவனி.
- சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆடி-6 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவாதசி காலை 6.45 மணி வரை பிறகு திரயோதசி பின்னிரவு 3.57 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம் : மிருகசீரிஷம் இரவு 7.52 மணி வரை பிறகு திருவாதிரை
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை கோவில்களில் முருகனுக்கு அபிஷேகம்
இன்று பிரதோஷம். நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பூந்தேரில் பவனி. நாகப்பட்டினம் ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் பெரிய கிளி வாகனத்திலும், மாலை வேணுகோபால அலங்கா ரத்திலும் காட்சி. நயினார்கோவில் ஸ்ரீ சவுந்திர நாயகி அம்மன் ஆடி வரும் திருக்கோலமாய்க் காட்சி. திரு மயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் ஸ்ரீ சுவாமி அம்பாள் மாலை ரிஷப வாகனத்தில் பவனி. திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்.
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் காலை சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-இன்பம்
ரிஷபம்-சுகம்
மிதுனம்-ஆக்கம்
கடகம்-தேர்ச்சி
சிம்மம்-நன்மை
கன்னி-நலம்
துலாம்- பொறுமை
விருச்சிகம்-போட்டி
தனுசு- நற்செய்தி
மகரம்-இன்சொல்
கும்பம்-லாபம்
மீனம்-பாராட்டு