வழிபாடு

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நவம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் நாளை வெளியீடு

Published On 2022-09-20 08:45 GMT   |   Update On 2022-09-20 11:12 GMT
  • ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை மாலை 3 மணியளவில் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.
  • அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரை அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கப்பட மாட்டாது.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசனம் செய்ய நவம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

அதேபோல் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீபலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை மாலை 3 மணியளவில் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். இந்த டிக்கெட்டுகள் முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். நவம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுக்கான எலக்ட்ரானிக் குலுக்கல் முறை நாளை நடக்கிறது.

அக்டோபர் மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 22-ந்தேதி காலை 9 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. ஆனால், பிரம்மோற்சவம் நடைபெறும் தேதிகளில், அதாவது அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரை அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கப்பட மாட்டாது. பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு, அந்தந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News