வழிபாடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருட சேவை நாளை நடக்கிறது
- பவுர்ணமி அன்று இரவில் தங்கக் கருட வாகனத்தில் மலையப்பசாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
- நாளை இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கருட சேவை நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவில் தங்கக் கருட வாகனத்தில் (கருட சேவை) உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) பவுர்ணமி கருடசேவை நடக்கிறது. இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை அலங்கரிக்கப்பட்ட தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.