வழிபாடு

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் கணபதி ஹோமம் நிறைவு

Published On 2022-10-28 07:23 GMT   |   Update On 2022-10-28 07:23 GMT
  • திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
  • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மஹோற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 2-வதுநாளான நேற்று கணபதி ஹோமம் நிறைவடைந்தது.

முன்னதாக காலை 8 மணியில் இருந்து காலை 11 மணிவரை யாக சாலையில் கணபதி பூஜை, நித்யஹோமம், மகா பூர்ணாஹுதி, கணபதி கலச உத்வாசனம், மகா அபிஷேகம், கலசாபிஷேகம், நிவேதனம், ஆரத்தி நடந்தது.

மாலை 6 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை சுப்பிரமணியசாமிக்கு கலச ஸ்தாபனம், லகு பூர்ணாஹுதி, சிறப்பு தீபாராதனை நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News