வழிபாடு

கபிலேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை

Published On 2022-11-06 08:21 GMT   |   Update On 2022-11-06 08:21 GMT
  • 8-ந்தேதி அன்னாபிஷேகம் நடக்கிறது.
  • 8-ந்தேதி அன்று சந்திர கிரகணமும் நிகழ்கிறது.

திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் 8-ந்தேதி தெலுங்கு கார்த்திகை பவுர்ணமி உற்சவம் நடக்கிறது. அன்றே கோவிலில் அன்னாபிஷேகமும் நடக்கிறது. 8-ந்தேதி அன்று சந்திர கிரகணமும் நிகழ்கிறது. இதனால் 8-ந்தேதி காலை 8.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை 11 மணிநேரம் கபிலேஸ்வரர் கோவில் கதவுகள் மூடப்படுகின்றன.

முன்னதாக 8-ந்தேதி அதிகாலை 3 மணியில் இருந்து அதிகாலை 3.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக அபிஷேகம், அதிகாலை 3.30 மணியில் இருந்து அதிகாலை 5.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக அன்னாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

அதைத்தொடர்ந்து அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 7.30 மணி வரை பக்தர்களுக்கு அன்னலிங்க தரிசனம், காலை 7.30 மணியில் இருந்து காலை 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக அன்னலிங்க உத்வாசனம் நடக்கிறது. அதன்பிறகு கோவில் சுத்தம் செய்யப்பட்டு காலை 8 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை ஏகாந்தமாக சுகந்த திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

அதைத்தொடர்ந்து காலை 8.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை சந்திர கிரகணத்தால் 11 மணிநேரம் கோவில் கதவுகள் மூடப்படுகின்றன. இரவு 7.30 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை கோவில் சுத்தம் செய்யப்படுகிறது.

அதன்பிறகு பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று சாமியை வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். இரவு 8 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை அபிஷேகம், இரவு 8.30 மணியில் இருந்து இரவு 10 மணி வரை அலங்காரம், சஹஸ்ரநார்ச்சனை, நிவேதனம், தீபாராதனை, இரவு 10 மணியில் இருந்து இரவு 10.15 மணி வரை ஏகாந்த சேவை நடக்கிறது.

மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News