திருச்செந்தூர் கோவிலில் இன்று வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகர்
- விழா நாட்களில் சுவாமியும் அம்பாளும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.
- வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழா நாட்களில் காலை மற்றும் மாலையில் சுவாமியும் அம்பாளும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர்.
திருவிழாவின் 6-ம் நாளான நேற்று இரவு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப் பெருமான் வெள்ளித்தேரிலும், வள்ளியம்பாள் இந்திர வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
7-ம்திருவிழாவான இன்று காலையில் சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
10-ம் திருவிழாவான வருகிற 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.