வழிபாடு

திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் குவிந்தனர்

Published On 2023-02-01 08:07 GMT   |   Update On 2023-02-01 08:07 GMT
  • பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற திரிபுர சுந்தரி அம்பாள் சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கும்பாபிஷேகம் விழா கடந்த 27-ந் தேதி காலை கணபதி ஹோமம், லஷ்மிஹோமம், நவகிரக ஹோமத்துடன் தொடங்கியது.

28-ந் தேதி காலை மூர்த்தி ஹோமம், சாந்தி ஹோமமும், திசா ஹோமமும், 29-ந் தேதி காலை அக்னி சங்கிரஹணம், தீர்த்த ஹங்கி ரஹணம், பிரசன்னாபிஷேகம், தீபாராதனை, யாக அலங்கா ரமும், மாலை கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை நடைபெற்றது 30-ந் தேதி காலை விசேஷ சந்தி, பாவனா பிஷேகம், இரண்டாம் கால யாகம், அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல், மாலை முதல் விஷேச சந்தி, பாவனா பிஷேகம், மூன்றாம் கால யாகம், பூர்ணாஹுதி, தீபாரா தனையும் நடந்தது.

நேற்று காலை விசேஷ சந்தி, நான்காம் கால யாகம், தத்வார்ச்சனை, திரவி யாஹூதி, தீபாராதனையும், மாலை ஐந்தாம் கால யாகம், ஸ்பரிஸாஹூதி, தீபாராதனையும் நடந்தது. இன்று காலை 6 மணிக்கு 6-ம் கால யாக பூஜையும், 8.30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, சண்டேச யாகமும் 9 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடும் நடந்தது.

இதனைத் தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியர்கள் ராஜ கோபுரம், மூலவர் விமான கோபுரம் மற்றும் அனைத்து விமான கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர். இதில் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவை யொட்டி கோவிலை சுற்றியுள்ள அனைத்து சாலைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு தீர்த்தீஸ்வரர் திருக்கல்யாணம், ரிஷப வாகன சேவை, பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீதீர்த்தீஸ்வரர் கோவில் பரம்பரை தர்ம கத்தா ஆர்.ரவி குருக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.

Tags:    

Similar News