வழிபாடு

தைப்பூச திருவிழா: சமயபுரத்தில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2025-02-02 10:26 IST   |   Update On 2025-02-02 10:26:00 IST
  • அம்மன் மர கேடயத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
  • காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று கொடிமரத்திற்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

மண்ணச்சநல்லூர்:

சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். தமிழ்நாட்டு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில் இக்கோயில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாகள் கொண்டாடபடும். அதில் தைப்பூச திருவிழா, பூச்சொரிதல் விழா, சித்திரை தேரோட்டம், ஆகியவை வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் இந்த தைப்பூச திருவிழாவை யொட்டி இன்று காலையில் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் மர கேடயத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.

பின்னர் அம்மனின் திருஉருவப்படம் வரையப்பட்ட துணியாலான கொடியை தங்க கொடிம ரத்தில் கோவிலின் குருக்கள் காலை 7.30 மணிக்கு ஏற்றினர். அதைத்தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று கொடிமரத்திற்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கோயிலின் அறங்காவல் குழு தலைவர் இளங்கோவன், இணை ஆணையர் பிரகாஷ், உறுப்பினர்கள் சுகந்தி, லட்சுமணன் பிச்சை மணி மற்றும் கிராம முக்கிய ஸ்தர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News