வழிபாடு

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா திருக்கல்யாணம்

Published On 2022-08-11 05:26 GMT   |   Update On 2022-08-11 05:26 GMT
  • பல்வேறு வாகனங்களில் சாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
  • நாளை (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடிப்பெருந் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து நேற்று மாலை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காசியாத்திரை, மாப்பிள்ளை அழைப்பு போன்ற வைபவங்கள் நடந்தன. அதைத்தொடர்ந்து கோவில் பட்டாச்சாரியார்களால் திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது.

பின்பு சவுந்தரராஜ பெருமாள், சவுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் திருமண கோலத்தில் எழுந்தருளி தேரோடும் வீதிகளில் உலா வந்தார். விழாவில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் தேரோட்டம் நடைபெறுகிறது.

இதில் தமிழக அமைச்சர்கள், மாவட்ட உயர் அலுவலர்கள், உள்ளாட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டு திருத்தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.

Tags:    

Similar News