வழிபாடு
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றம்
- பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்கினார்.
- ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. கொடியேற்ற நிகழ்ச்சிக்கு மதுரை உயர் மறைமாவட்டம் பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்கினார்.
முட்டைக்காடு பங்குதந்தை மனோகியம் சேவியர், ஆலன்விளை பங்குதந்தை பிரைட் சிம்ராஜ், மாடத்தட்டுவிளை பங்குதந்தை ஜெயக்குமார், இணை பங்குதந்தை செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பங்கு அருட்பணி பேரவை துணைத்தலைவர் எட்வின் சேவியர் செல்வின், செயலாளர் ராணி ஸ்டெல்லா பாய், துணைச் செயலாளர் ஜோஸ்வால்டின், பொருளாளர் லூக்காஸ் உள்பட ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.