வழிபாடு
null

சிவன் கோவிலில் எப்படி பிரதட்சணம் செய்தால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும்...

Published On 2023-06-28 08:50 GMT   |   Update On 2023-06-28 08:51 GMT
  • பூமி அதிர நடக்கக் கூடாது.
  • நிதானமாக பேசாமல் இறை உணர்வுடன் வலம் வருதல் வேண்டும்.

சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும் என்பது வாஸ்தவம் தான். ஆனால் நாம் சிவன் கோவிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு. அதனால் நமக்கு இறைவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கக் கூடும். எப்படி எல்லாம் பிரதட்சணம் செய்தால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

சிவாலயங்களில், கோவிலினுள் இருக்கும் அனைத்து தெய்வங்களையும் வணங்கி விட்டு (நவகிரகங்களை தவிர), ஆலயத்தின் முன் இருக்கும் கொடிமரத்தின் அருகில் நின்று மூன்று முறை சாஷ்டாங்கமாக வணங்க வேண்டும். கோவிலின் மற்ற சன்னதிகளில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கக் கூடாது.

அதன் பின்னர் வெளிப் பிரகாரத்தை மூன்று முறை வலம் வர வேண்டும். அப்படி வலம் வரும் போது கொடிமரத்தையும் சேர்த்து வலம் வருவது அவசியம்.

அடி பிரதட்சணம் செய்பவர்கள் பொறுமையாக பிரதட்சணம் செய்ய வேண்டும். பூமியை, அதாவது நிலத்தைப் பார்த்த படி, சிவ நாமத்தை நினைத்த படி செய்ய வேண்டும். பூமி அதிர நடக்கக் கூடாது.

கோவிலின் உட்பிரகாரத்தில் பிரதட்சணம் செய்வதை விட, கோவிலின் வெளிப்பிரகாரத்தில் பிரதட்சணம் செய்யும் போது அதிக பலன்கள் கிடைக்கும். கோவிலுக்கு வெளியே செருப்பு கழட்டிட்டு போறதுக்கு உண்மையான காரணம் இது தான். வெளிப்புறப் பிரகாரத்தில் கொடி மரத்தையும் சேர்த்து பிரதட்சணம் செய்வது மிக அவசியம். கடைசியாக நவகிரக சன்னதியில் வணங்கி சிவனின் அருளோடு வீடு திரும்பலாம்.

ஆலயங்களை மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்ற எண்ணிக்கையில் வலம் வரலாம். கோவிலை வேகமாக எண்ணிக்கை கணக்கிற்காக வலம் வருதல் பயனற்றது. நிதானமாக பேசாமல் இறை உணர்வுடன் வலம் வருதல் வேண்டும்.

கோவில்களில் மூலவர் பிரார்த்தனை முடிந்ததும், பிரகாரத்தை வேகமாக வலம் வருவார்கள். இது மிகவும் தவறானது. கோவில்களில் மூலவர் பிரார்த்தனை முடிந்ததும், பிரகாரத்தை வலம் வந்து வணங்குவது வழக்கம். சிலர், வேலைக்குப் போக வேண்டும் அல்லது அவசரமாக வெளியே கிளம்ப வேண்டும் என்ற நோக்கத்தில், வேக வேகமாக கோவிலை வலம் வருவார்கள்.

ஒரு நிறைமாத கர்ப்பிணி, எவ்வாறு நடப்பாளோ, அந்தளவு வேகத்தில் தான் பிரகாரத்தை வலம் வர வேண்டும். அப்போது, அந்த தெய்வத்தின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். கதை பேசிக்கொண்டும், சேஷ்டைகள் செய்தபடியும் கோவிலை வலம் வரக்கூடாது. குழந்தைகள் சப்தம் செய்தால், அவர்களுக்கு பக்குவமாக எடுத்துச்சொல்லி, அமைதிப்படுத்த வேண்டும். இவ்வாறு வலம் வருவதால், முன் ஜென்ம பாவங்கள் எல்லாம் விலகி விடும்.

ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

Tags:    

Similar News