வழிபாடு

சீதா-ராமர் திருக்கல்யாண உற்சவம் ஏப்ரல் 5-ந்தேதி நடக்கிறது

Published On 2023-03-22 07:24 GMT   |   Update On 2023-03-22 07:24 GMT
  • ஸ்ரீவாரி சேவா தொண்டர்களுக்கு பாஸ்கள் வழங்கப்படும்.
  • பொறுமையுடன் செயல்பட்டு பக்தர்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா கோதண்டராமர் கோவிலில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந்தேதி மாலை 4 மணியளவில் சீதா, ராமர் திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது. அதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் சிறப்பான சேவையை வழங்க வேண்டும்.

பக்தர்களுக்கு வினியோகம் செய்வதற்காக அன்னப்பிரசாதம், லட்டு, அட்சதை, மஞ்சள், குங்கும பாக்கெட்டுகள், குடிநீர் பாக்கெட்டுகள் போன்றவற்றை கொண்ட பைகளை தயார் செய்து கொள்ளுங்கள். சேவை தொடர்பான ஸ்ரீவாரி சேவா தொண்டர்களுக்கு பாஸ்கள் வழங்கப்படும், நீங்கள் அனைவரும் பொறுமையுடன் செயல்பட்டு பக்தர்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News