வழிபாடு

ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் 16, 31-ந்தேதிகளில் வெளியீடு: திருப்பதி தேவஸ்தானம் தகவல்

Published On 2022-12-13 07:45 GMT   |   Update On 2022-12-13 07:45 GMT
  • ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க தேவஸ்தானம் டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிடுகிறது.
  • பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க தேவஸ்தானம் 16 மற்றும் 31-ந்தேதிகளில் காலை 9 மணிக்கு ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிடுகிறது.

பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News