வழிபாடு
பெருமாளின் அஷ்ட சுயம்பு திவ்ய தேசங்கள்
- 108 ஆலயங்களில், எட்டு ஆலயங்களில் பெருமாள், சுயம்புவாக கோவில் கொண்டிருக்கிறார்.
- அந்தக் கோவில்கள், `அஷ்ட சுயம்பு திவ்ய தேசங்கள்’ எனப்படுகின்றன.
பெருமாள் கோவில் கொண்டிருக்கும் ஆலயங்களில், 12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 சிவாலயங்கள், 'திவ்ய தேசங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இந்த 108 ஆலயங்களில், எட்டு ஆலயங்களில் பெருமாள், சுயம்புவாக கோவில் கொண்டிருக்கிறார். அந்தக் கோவில்கள், `அஷ்ட சுயம்பு திவ்ய தேசங்கள்' எனப்படுகின்றன. அவற்றைக் காணலாம்...
* திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலைப் பெருமாள் கோவில்.
* ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பூவராகப் பெருமாள் கோவில்.
* திருவரங்கத்தில் உள்ள அரங்கநாதர் கோவில்.
* திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்.
* பத்ரிநாத்தில் உள்ள பத்ரிநாராயணர் கோவில்.
* நேபாளத்தில் சாளக்கிராமம் என்ற இடத்தில் உள்ள முக்தி நாராயணர் கோவில்.
* புஷ்கரம் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீபெருமாள் ஆலயம்.
* நைமிசாரண்யத்தில் உள்ள தேவராஜன் திருக்கோவில்.