வழிபாடு

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் தேரோட்டம் இன்றும், நாளையும் நடக்கிறது

Published On 2023-04-13 05:15 GMT   |   Update On 2023-04-13 05:15 GMT
  • 15-ந்தேதி முத்து பல்லக்கில் அம்மன் புறப்பட்டு நடக்கிறது.
  • 16-ந்தேதி கோட்டை சிவன் கோவிலுக்கு நாடியம்பாள் உற்சவ சிலை கொண்டு செல்லப்படும்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற நாடியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி பதுமை பூ போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று மாவிளக்கு திருவிழாவும், காவடி, பால்குடம் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான இன்றும்(வியாழக்கிழமை), நாளையும்(வெள்ளிக்கிழமை) தேர் திருவிழா நடைபெறுகிறது. அப்போது நாடியம்பாள் மகா ரகத்தில் பட்டுக்கோட்டை பக்தர்கள் மத்தியில் வீதி உலா நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடிக்கின்றனர்.

தேர் திருவிழா முடித்து தேரில் இருந்து அம்பாள் இறக்கி கோவிலுக்கு வந்து காப்பு அவிழ்ப்பு நிகழ்ச்சி நடைபெறும். வருகிற 15-ந்தேதி இரவு முத்து பல்லக்கில் அம்மன் புறப்பட்டு, 16-ந்தேதி காலை கோட்டை சிவன் கோவிலுக்கு நாடியம்பாள் உற்சவ சிலை கொண்டு செல்லப்படும். இத்துடன் விழா நிறைவடைகிறது.

இதற்கான ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள், கோவில்நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News