வழிபாடு
நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலய தேர் பவனி
- தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்திற்கு வந்தடைந்தது.
- இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் 171-வது ஆண்டு பெருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் காலை, மாலையில் திருப்பலியும், மாலையில் சிறிய தேர் பவனியும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர் பவனி நேற்று நடந்தது.
இதனை முன்னிட்டு நேற்று காலை புதுச்சேரி- கடலூர் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் கூட்டுபாடல் திருப்பலி நடந்தது. மாலையில் ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். ஆலயம் முன்பு இருந்து தொடங்கிய தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்திற்கு வந்தடைந்தது.