வழிபாடு

கருப்பு கங்கையம்மனுக்கு வெள்ளிக்கிரீடம், கவசம் காணிக்கை

Published On 2024-04-11 03:35 GMT   |   Update On 2024-04-11 03:35 GMT
  • வீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்.
  • பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து தரிசனம் செய்தனர்.

ஸ்ரீகாளஹஸ்தி:

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி நகரின் வடகிழக்குத் திசையில் எழுந்தருளி உள்ள கருப்பு கங்கையம்மன் கோவிலுக்கு பெயர், ஊர் விவரம் குறிப்பிடப்படாத பக்தர் ஒருவர் வெள்ளியாலான கிரீடம், கவசம், நாகப்படகு ஆகியவற்றை காணிக்கையாக வழங்கினார். அதை கோவில் நிர்வாகிகள் பெற்று, அந்த பக்தருக்கு தரிசன ஏற்பாடுகளை செய்து வைத்தனர்.

அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகிகள் உற்சவர் அம்மனுக்கு அலங்காரம் செய்து, மேளதாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். வழிநெடுகிலும் பக்தர்கள் கங்கையம்மனுக்கு தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News