வழிபாடு

நெல்லையப்பர் கோவிலில் தீர்த்தவாரி

Published On 2022-07-13 04:00 GMT   |   Update On 2022-07-13 04:00 GMT
  • தினமும் சுவாமி, அம்பாள் வீதிஉலா, பக்தி இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
  • சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஆனிப்பெருந்திருவிழா 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு நடைபெற்றது. கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாள் வீதிஉலா, பக்தி இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

நெல்லையப்பர் கோவிலில் தீர்த்தவாரிதிருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. 10-வது திருநாளான நேற்று சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

இதை தொடர்ந்து கோவில் உள்ளே அமைந்திருக்கும் பொற்றாமரைக்குளத்தில் சுவாமி, அம்பாள் தீர்த்தவாரியும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News