வழிபாடு

புளியங்குடி முப்பெரும் தேவியர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்

Published On 2022-10-12 12:17 IST   |   Update On 2022-10-12 12:17:00 IST
  • 1008 லிட்டரில் சிறப்பு பால் அபிஷேகமும் நடந்தது.
  • முப்பெரும் தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள முப்பெரும் தேவியர் பவானியம்மன் ஆலயத்தில் பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.

இதையொட்டி மாலை கோவில் குருநாதர் சக்தியம்மா ஆன்மிக சொற்பொழிவாற்றினார். முப்பெரும்தேவி அம்மனுக்கு பன்னீர், மஞ்சள் உள்பட 21 வகையான அபிஷேகங்களும், 1008 லிட்டரில் சிறப்பு பால் அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் பாலாபிஷேகம் நடந்தது. பின் முப்பெரும் தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இரவு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பவுர்ணமி பூஜையை முன்னிட்டு இரவு சிறப்பு அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News