வழிபாடு

கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: கொடி மரத்துக்கு பாலாலய பூஜை இன்று நடக்கிறது

Published On 2023-07-05 02:51 GMT   |   Update On 2023-07-05 02:51 GMT
  • இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 2006-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
  • கோவிலில் திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 2006-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதையொட்டி கோவிலில் திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதன் முதற்கட்ட திருப்பணியாக நேற்று மாலை 4 மணியளவில் முதற்கால யாக பூஜைகள் தொடங்கியது. இதில் கணபதி வழிபாடு, யாகம் மற்றும் கொடி மரத்துக்கு பூஜைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று (புதன் கிழமை) காலை 9 மணியளவில் 2-ம் கால பூஜைகள் நடக்கிறது. இதில் கோவில் கொடி மரத்துக்கு பாலாயம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News