வழிபாடு

நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம்

Published On 2022-11-04 12:05 IST   |   Update On 2022-11-04 12:05:00 IST
  • பக்தர்கள் கோவிலுக்கு கல்யாண சீர்வரிசை எடுத்து வந்தனர்.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாபநாசம் அருகே நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியசுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. விழாவை முன்னிட்டு சுப்பிரமணியனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

இதனை தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்கு கல்யாண சீர்வரிசை எடுத்து வந்தனர். அதன் பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஐதீக முறைப்படி திருக்கல்யாணம் நடந்தது.

இதில் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ., கோவில் கண்காணிப்பாளர் கார்த்தி, ஆய்வாளர் குணசேகரன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சங்கர், பாஸ்கர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News