வழிபாடு

அனுமன் ஜெயந்தி: அலிவலம் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 23-ந் தேதி சிறப்பு யாகம்

Published On 2022-12-21 04:58 GMT   |   Update On 2022-12-21 04:58 GMT
  • சந்தன காப்பு அலங்காரத்துடன் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது.
  • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

திருச்சிற்றம்பலம் அருகே அலிவலம் மண்ணுமுடைய அய்யனார் கோவில் வளாகத்தில் பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை 6 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது.

மாலை 3 மணிக்கு வேத விற்பன்னர்கள் முன்னிலையில் சிறப்பு யாகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

பக்தர்கள் மண்ணுமுடைய அய்யனாரையும், பக்த ஆஞ்சநேயரை தரிசனம் செய்வதற்கு வசதியாக கோவில் வளாகத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. வழிபாடு ஏற்பாடுகளையும் பக்த ஆஞ்சநேயர் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் அலிவலம் கிராம மக்கள் செய்து உள்ளனர்.

Tags:    

Similar News