வழிபாடு

குருப்பெயர்ச்சி: காக்களூர் தட்சணாமூர்த்தி கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2023-04-23 08:36 GMT   |   Update On 2023-04-23 08:36 GMT
  • குரு பகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
  • தட்சணாமூர்த்திக்கு 108 லிட்டர் பால்குட அபிஷேகம் நடைபெற்றது.

மீனராசியில் இருந்து மேஷ ராசிக்கு நேற்று இரவு 11.24 மணிக்கு குருப்பெயர்ச்சி நடந்தது. இதையொட்டி திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள ஸ்ரீயோகா ஞான தட்சண மூர்த்தி கோவிலில் சிற்ப்பு வழிபாடு நடைபெற்றது.

கோவிலில் உள்ள குரு பகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக இரவு 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, காளி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தட்சணாமூர்த்தி மூலமந்திரம் ஹோமம் ஸ்ரீயோகஞான தட்சணாமூர்த்தி அஸ்த்ர ஹோமம் நடந்தது.

தொடர்ந்து 9 மணிக்கு தட்சணாமூர்த்திக்கு 108 லிட்டர் பால்குட அபிஷேகம் நடைபெற்றது. சரியாக இரவு 11.24 மணிக்கு குருப்பெயர்ச்சி அடையும் நேரத்தில் குருபகவான் சிலைக்கு மகா தீபாராதனை நடந்தது.

பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் கோவிலில் நடைபெற்ற பரிகார மகா யாகத்தில் பங்கேற்றனர். குருபெயர்ச்சி சிறப்பு வழிபாட்டில் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News