வழிபாடு

5-வது ஆண்டாக 7-4-2025 ஆயில்யத்தன்று ஆரூரானுக்கு ஆழித்தேரோட்டம்!

Published On 2025-04-04 08:57 IST   |   Update On 2025-04-04 08:57:00 IST
  • பங்குனி உத்திர திருவிழாவின் போது ஆழித்தேரோட்டம் நடைபெறுவதுண்டு.
  • பல ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் ஆழித்தே ரோட்டம் நடைபெறவில்லை.

திருவாரூர் தியாராஜர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவின் போது முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் நடைபெறுவதுண்டு.


இந்த விழாவிற்காக மாசி மாதத்தில் வரும் அஸ்த நட்சத்திரத்தில் கோவிலில் கொடியேற்றப்பட்டு, பங்குனி மாதத்தில் வரும் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடத்த வேண்டும் என்பது ஆகமவிதி.

ஆனால், பல ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் ஆயில்ய நட்சத்திரத்தன்று ஆழித்தே ரோட்டம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகமவிதியை கடைபிடித்து ஆரூரானுக்கு ஆயில்யத்தன்று தான் தேரோட்டம் நடத்த வேண்டும் என்ற பக்தர்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது.


30 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2021-ம் ஆண்டு ஆயில்ய நட்சத்திர தினத்தன்று ஆழித்தேரோட்டம் நடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளிலும், முறையே, கடந்த ஆண்டு (2024) நடந்த பங்குனி திருவிழாவின் போது ஆயில்ய நட்சத்திர தினத்தன்று தான் தேரோட்டம் நடந்தது.

அதே போல், இந்த ஆண்டும் தொடர்ந்து 5-வது முறையாக ஆயில்ய நட்சத்திரம் வரும் அதே நாளான வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) ஆழித்தேர் திருவிழா நடைபெற உள்ளது. இது சிவபக்தர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News