வழிபாடு

கோவில் கிணற்றில் பக்தர்கள் புனித நீராடிய போது எடுத்த படம்.

திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி

Published On 2023-03-25 06:35 GMT   |   Update On 2023-03-25 06:35 GMT
  • திரளான பக்தர்கள் கோவில் கிணற்றில் புனித நீராடினர்.
  • இந்த நீர் காசிக்கு இணையான புனிதநீராக கருதப்படுகிறது.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு அருகே திருமெய்ஞானத்தில் பிரசித்தி பெற்ற பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து புனிதநீரை எடுத்து வந்து தினமும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. இந்த நாளில் கோவில் கிணற்றில் பக்தர்கள் புனித நீராடுவது சிறப்பாகும்.

இந்த நீர் காசிக்கு இணையான புனிதநீராக கருதப்படுகிறது. ஆண்டில் பங்குனி அசுவதி நட்சத்திரத்தன்று மட்டும் பக்தர்கள் இந்த கோவில் கிணற்றில் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள்.

நேற்று பங்குனி அசுபதி நட்சத்திரத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி ஆம்ல குஜாம்பிகா, பிரம்மபுரீஸ்வரர் ஆகிய சாமிகளுக்கு பால், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் கிணற்றில் பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கணேச குருக்கள், கோவில் நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News