வழிபாடு

ஆரல்வாய்மொழி இசக்கியம்மன் கோவில் கொடைவிழா நாளை நடக்கிறது

Published On 2022-08-22 04:21 GMT   |   Update On 2022-08-22 04:21 GMT
  • மதியம் 12 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.
  • இரவு 12 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.

ஆரல்வாய்மொழி மீனாட்சிபுரம் பொற்றை இசக்கியம்மன் கோவில் கொடைவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், சுத்திகலச பூஜை, சத்தி பூஜை நடைபெறுகிறது. இதனை மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவில் மேல்சாந்தி கிருஷ்ணபட்டர் நடத்துகிறார்.

9 மணிக்கு வடக்கூர் அகலிகை ஊற்றிலிருந்து பால்குடம், பறக்கும் காவடி புறப்பட்டு கோவிலை அடைகிறது. 11 மணிக்கு கலச பூஜை, மதியம் 12 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது. இதனை ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் தொடங்கி வைக்கிறார்.

மாலை 5 மணிக்கு திருவிளக்குபூஜை, இரவு 9 மணிக்கு பொங்கல் வழிபாடும், அலங்கார தீபாராதனையும் அதனை தொடர்ந்து பலியிடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. கொடைவிழா ஏற்பாடுகளை பொற்றை இசக்கியம்மன் கோவில் பூசாரிகள் பாஸ்கர், வெற்றிவேல் தலைமையில் விழாக்குழுவினர் செய்து உள்ளனர்.

Tags:    

Similar News