வழிபாடு

கள்ளழகர் கோவிலில் நாளை ஆடி தேரோட்டம்

Published On 2022-08-11 07:27 GMT   |   Update On 2022-08-11 07:27 GMT
  • இன்று மாலையில் தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் காட்சி தருகிறார்.
  • 14-ந்தேதி உற்சவ சாந்தியுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.

மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஆடி பெருந்திருவிழா நடக்கவில்லை. இந்த ஆண்டு கடந்த 4-ந் தேதி கொடி ஏற்றத்துடன் ஆடி பெருந்திருவிழா தொடங்கியது.

விழாவில் இன்று மாலையில் தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் காட்சி தருகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை(வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு மேல் 4.35 மணிக்குள் சுவாமி தேவியர்களுடன் தேருக்கு எழுந்தருள்கிறார்.

இதைதொடர்ந்து காலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்குள் தேரோட்டம் தொடங்குகிறது.

13-ந் தேதி மாலையில் புஷ்ப சப்பரம், 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) உற்சவ சாந்தியுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News