வழிபாடு

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2023-07-13 02:57 GMT   |   Update On 2023-07-13 02:57 GMT
  • ஆடிப்பூர உற்சவம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
  • 20-ந்தேதி பெரியநாயகி அம்மன் தேரோட்டம் நடைபெற உள்ளது.

பண்ருட்டி திருவதிகையில் பிரசித்தி பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர உற்சவம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

அதுபோல் இந்தாண்டிற்கான உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் மூலவர் வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் உற்சவர் பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் கொடி மரம் முன்பு எழுந்தருளினார்.

தொடர்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு விதமான பொருட்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, உற்சவ கொடியேற்றப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 20-ந்தேதி(வியாழக்கிழமை) பெரியநாயகி அம்மன் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News