வழிபாடு

திருப்பதி கோவிலில் கோடை விடுமுறையின் கடைசி நாளில் 92 ஆயிரம் பேர் சாமி தரிசனம்

Published On 2023-06-12 04:15 GMT   |   Update On 2023-06-12 04:15 GMT
  • மே மாதத்தில் 23 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
  • 1 கோடியே 6 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையொட்டி ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்கள் 2 நாட்கள் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவு பக்தர்கள் வந்தனர். தரிசனத்தை எளிமைப்படுத்துவதற்காக வெள்ளி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

ஏழுமலையான் கோவிலில் கடந்த மே மாதத்தில் 23 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.109.99 கோடி உண்டியல் வருமானமாக கிடைத்துள்ளது.

1 கோடியே 6 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டன.

56 லட்சத்து 30 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. 11 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

கோடை விடுமுறையின் கடைசி நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

எங்கு பார்த்தாலும் பக்தர்களாக காட்சியளித்தனர்.நேற்று ஒரே நாளில் 92,328 பேர் சாமி தரிசனம் செய்தனர். 40,400 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.2 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

கடந்த 3 ஆண்டுகளில் ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை இதுவே அதிகமாகும்.

திருப்பதியில் இன்று காலையில் பக்தர்கள் காத்திருப்பு அறைகளை தாண்டி ஒரு கிலோமீட்டருக்கு மேல் வரிசையில் காத்திருந்தனர்.

சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆனது.

Tags:    

Similar News