உலகம்

கனடாவில் மர்மநபர் துப்பாக்கி சூடு- 5 பேர் பலி

Published On 2022-12-19 12:48 IST   |   Update On 2022-12-19 13:37:00 IST
  • கனடாவின் டொராண்டோ புறநகரில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.
  • துப்பாக்கியால் சுட்ட நபர் யார் என்பது தெரியவில்லை.

டொராண்டோ:

கனடாவின் டொராண்டோ புறநகரில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மர்மநபரை சுட்டுக் கொன்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஜேம்ஸ் கூறும்போது, டொராண் டோவின் புறநகரில் மர்ம நபர் சுட்டதில் பொது மக்கள் 5 பேர் உயிரிழந்துள் ளனர். ஒருவர் படுகாய மடைந்துள்ளார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கியால் சுட்ட நபர் யார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றார்.

Similar News