வழிபாடு
வேதபுரீஸ்வரர் கோவில்

தை அமாவாசையை முன்னிட்டு வேதபுரீஸ்வரர் கோவிலில் ஐதீக தரிசனம் இன்று நடக்கிறது

Published On 2022-01-31 09:02 IST   |   Update On 2022-01-31 09:02:00 IST
தை அமாவாசையான இன்று (திங்கட்கிழமை) புதுவை காந்திவீதியில் உள்ள திரிபுர சுந்தரி உடனுறை வேதபுரீஸ்வரர் கோவிலில் காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
புதுச்சேரி சிறுதொண்ட நாயனார் திருத்தொண்டு சபையின் சார்பாக ஆண்டுதோறும் தை அமாவாசையை முன்னிட்டு அபிராமி அந்தாதி விழா நடைபெறும்.

அதன்படி தை அமாவாசையான இன்று (திங்கட்கிழமை) புதுவை காந்திவீதியில் உள்ள திரிபுர சுந்தரி உடனுறை வேதபுரீஸ்வரர் கோவிலில் காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சிக்கு காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

இரவு 7.30 மணிக்கு காசி விசாலாட்சி சன்னதியில் அபிராமி அந்தாதி பாராயணமும், நிலவொளி காட்டி அருளிய ஐதீக தரிசனமும் நடைபெறுகிறது.

Similar News