வழிபாடு
திருச்செந்தூர் கோவிலில் திரண்ட பக்தர்கள்: கடலில் புனிதநீராடி சுவாமி தரிசனம் செய்தனர்
திருச்செந்தூர் கோவிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். கோவில் வளாகம் இன்று பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அவர்கள் கடலில் புனித நீராடி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் கொரோனா 3-வது அலையை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கை தொடர்ந்து அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அறுபடைவீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் கோவிலில் கடந்த 3 நாட்களாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் ஆகம விதிப்படி வழக்கம் போல் அனைத்து பூஜைகளும் நடைபெற்றன.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு பின்னர் இன்று திங்கட்கிழமை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். அவர்கள் கடலில் புனித நீராடி தரிசனம் செய்தனர்.
ஏராளமானவர்கள் திரண்டதால் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்து நின்றனர். இதனால் கோவில் வளாகம் இன்று பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. திருச்செந்தூர் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடந்து வருகிறது.
அறுபடைவீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் கோவிலில் கடந்த 3 நாட்களாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் ஆகம விதிப்படி வழக்கம் போல் அனைத்து பூஜைகளும் நடைபெற்றன.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு பின்னர் இன்று திங்கட்கிழமை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். அவர்கள் கடலில் புனித நீராடி தரிசனம் செய்தனர்.
ஏராளமானவர்கள் திரண்டதால் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்து நின்றனர். இதனால் கோவில் வளாகம் இன்று பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. திருச்செந்தூர் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடந்து வருகிறது.